2996. |
கடுவுடை
வாயினர் கஞ்சி வாயினர் |
|
பிடகுரை
பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாடக் கோயிலே. 10
|
2997. |
மைந்தன
திடம்வைகல் மாடக் கோயிலைச் |
|
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே. 11 |
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும், கஞ்சி
குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும், புத்தர்களின் பிடக
நூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது, மடம்
என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில்
மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும்.
கு-ரை:
கடு - உடைவாயினர் - கடுக்காயைத் தின்பவர் (புத்தர்). கஞ்சி
வாயினர் - கஞ்சியைக் குடிப்போர் (சமணர்). இவர்கள் சொல்லப்படுகின்ற
திரிபிடகம் முதலிய அவர்கள் சமய நூல்களைப் பொருட்படுத்தாதவராகிய
சிவனடியார்கள் பாராட்டும் கோயில். வடமலை-மேருமலை (போன்ற)
மாடக்கோயிலாம்.
11.
பொ-ரை: அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும்
இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச்
சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய அழகிய திருச்சண்பை நகரில்
அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச்
சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர்.
கு-ரை:
சந்து - சந்தன மரங்கள். சண்பை-சீகாழி. சிந்தை செய்பவர்
சிவலோகத்து இருப்பர்.
|