| 
         
          | 19. 
              திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் |  
       பதிக வரலாறு:      	
        இருக்கு மொழிப்பிள்ளையாரும் உருக்கும் மொழி வேந்தரும் செய்தவக் குழாத்தொடும் திருவம்பர்ப் பெருந் திருக்கோயிலை
 அணைந்தனர். கோயிலை வலங்கொண்டனர். திரு முன்பு பணிந்து ஏத்தி
 மலர் தூவிப் பரவி உருகும் அன்பொடும் தாழ்ந்து பாடியருளிய
 வண்டமிழ்மாலை இத்திருப்பதிகம்.
 பண்: 
        காந்தார பஞ்சமம்  
         
          | ப.தொ.எண்: 277 |  | பதிக 
            பதிக எண்:19 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 2998. | எரிதர 
            அனல்கையில் ஏந்தி யெல்லியில் |   
          |  | நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
 குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.     1
 |  
       
      1. 
        பொ-ரை: இறைவர் எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்தி நள்ளிருளில், நரிகள் திரிகின்ற மயானத்தில் திருநடனம் புரிகின்றார்.
 அப்பெருமானார் அரிசில் ஆறு பாய்வதால் நீர்வளமிக்க அம்பர்
 மாநகரில் பெருமையிற் சிறந்த, சிவந்த கண்களையுடைய கோச்செங்கட்
 சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        நெருப்பு, கையில் எரிய ஏந்திக் கொண்டு இரவில் மயானத்தில் நட்டம் (நடனம்) ஆடுவாய் என்பது முதலிரண்டு அடியின் கருத்து. அரிசில்
 அம்பொரு புனல் அம்பர் - அரிசில் ஆற்றின் நீர்வளம் பொருந்திய
 திருஅம்பர். குரிசில் - சிறந்தோன்.
      செங்கண்ணவன் 
        - கோச்செங்கட்சோழ நாயனார். நட்டம் ஆடுபவராகிய சிவபெருமான் அம்பர்மா நகர்க்கோயில் சேர்ந்திருப்பர்
 என்பது முடிவு. மகாப்பிரளய காலத்தில் எங்கும் ஒரே இருள்மயமாய்
 இருத்தலின், எல்லியில் என்றார். நரி திரிகான் - சுடுகாடு. கோயில்
 சுடுகாடு என்பது காண்க. (திருவாசகம்)
 |