3028. |
பூமனுந் திசைமுகன் றானும் பொற்பமர் |
|
வாமனன்
அறிகிலா வண்ண மோங்கெரி
ஆமென வுயர்ந்தவன் அணிக ருக்குடி
நாமன னினில்வர நினைதல் நன்மையே. 9 |
3029. |
சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி |
|
ஆக்கிய வுரைகொளேல் அருந்தி ருந்நமக்
காக்கிய அரனுறை அணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே. 10 |
9.
பொ-ரை: தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும், அழகிய
வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம், ஓங்கிய
நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட
நன்மையாகும்.
கு-ரை:
பூம(ன்)னும் - பூவில் வாழும். பொற்பு அமர் வாமனன் -
அழகு பொருந்திய வாமன அவதாரமெடுத்த திருமாலும். பொற்பு அமர்
என்பது குறிப்பு. கருக்குடி...நன்மையே - கருக்குடி நமது மனத்தில் வரும்படி
நாம் நினைத்தல் நன்மையேயாகும். மனம் - மனன் எனப் போலியாய்
ஏழனுருபுபெற்று மனனில் என்று ஆகி அதனோடு இன்சாரியை பெற்று
மனனினில் என்று ஆயிற்று.
10.
பொ-ரை: புத்தரும், சமணர்களுமான வஞ்சகர் கூறும்
பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா. பெறுதற்கரிய
சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள
பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள்.
கு-ரை:
சமண்படு - சமணக் கோட்பாடு. பொருந்திய. கையர் -
வஞ்சகர். அருந்திரு - சைவசமயத்திற் பிறத்தல் பிறர் எவருக்குங்
கிடைத்தற்கரிய திரு - செல்வம், பாக்கியம். நரர்பயில் தேயந்தன்னில்
நான்மறை பயிலா நாட்டில் ... ... பரசமயங்கள் செல்லாப் பாக்கியம்
பண்ணொணாதே. சிவஞான சித்தியார். அத்திருவை நமக்கு ஆக்கிய
அரன். புடைபட்டு - சார்ந்து; ஒருமை பன்மை மயக்கம்.
|