|
3030. |
கானலில்
விரைமலர் விம்மு காழியான் |
| |
வானவன் கருக்குடி மைந்தன் றன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க் குயரு மின்பமே. 11 |
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள்
நிறைந்த சீகாழியில் அவதரித்த, வானவர் தொழுதெழு திருக்கருக்குடி
என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான மெய்ஞ்ஞான சம்பந்தன்
அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பேரின்பம்
மிகும்.
கு-ரை:
மைந்தன் - சம்பந்தன். சிவனொளியே தான் ஆன மெய்ஞ்
ஞானசம்பந்தம் பெற்ற வலிமையோடு கூடியவன்.
|
ஆளுடைய
பிள்ளையார் திருவந்தாதி
மொழிவது
சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்
தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந்
தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ
மொழிவது சேரி மூரிப்புதை மாதர் முறுவலித்தே.
|
| |
வலிகெழு
குண்டர்க்கு வைகைக் கரை அன்று வான்கொடுத்த
கலிகெழு திண்டோட் கவுணியர் தீபன் கடல்உடுத்த
ஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரும்
மலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே. |
| |
|
நகரங்
கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள்
பகரங் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம்
மகரங் கிளர்கடல் வையந்துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப் பிரானென்பர் நீணிலத்தே.
-நம்பியாண்டார் நம்பிகள்.
|
|