பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)23. திருவிற்கோலம்561

3051. கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய
  சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.       11

திருச்சிற்றம்பலம்


மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

     கு-ரை: சீர்மை - ஒழுங்கு. நான்காமடியிற் சீர்மை - மேன்மை.
“சீர்மை சிறப்பொடு நீங்கும்” (குறள் - 195) என்பதிற்போல, சமணர் என்ற
சொல் சமண் என விகுதி குன்றி வந்தது; தூது, அரசு அமைச்சு என்றாற்
போல். சீவரம் - புத்தமதத் துறவி யுடுத்தும் காவி ஆடை. கையர் வெறுக்கத்
தக்கவர். கைத்தல் - வெறுத்தல்.

     11. பொ-ரை: வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில்
சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய, வளமையான மதில்களையுடைய
திருவிற்கோலம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை
நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்லவர்கட்குப்
பாவம் இல்லை.

     கு-ரை: கோடல் - கோடுதல்; வளைதல். சேடன - சிவ
பெருமானுடைய (திருவிற்கோலத்தை).

திருஞானசம்பந்தர் புராணம்

திருத்தொண்டர் பலர்சூழத் திருவிற்கோ லமும்பணிந்து
பொருட்பதிகத் தொடைமாலை புரம்எரித்த படிபாடி
அருட்புகலி ஆண்டகையார் தக்கோலம் அணைந்தருளி
விருப்பினொடுந் திருவூறல் மேவினார் தமைப்பணிந்தார்.

                                 -சேக்கிழார்.