| 
         
          | 3095. | தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம் |   
          |  | கண்ணுத லவனடிக் கழுமல வளநகர் நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
 பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே.   11
 |   
        
        திருச்சிற்றம்பலம்  
       
		 
      11. 
        பொ-ரை: குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின்
 திருவடிகளை, திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல
 ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்களின்
 பாவம் நீங்கும்.
       கு-ரை: 
        மெய்ப்பாவமே-உடம்பினாற் செய்த பாவம் . எனவே ஏனைக்கரணங்களாற் செய்த பாவமும் அடங்குதலறிக.
 
       
         
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  சக்கரப் 
              பள்ளியார் தந்திருக் கோயிலுள்புக்கருத் தியினுடன் புனைமலர்த் தாள்பணிந்
 தக்கரைப் பரமர்பால் அன்புறும் பரிவுகூர்
 மிக்கசொற் றமிழினால் வேதமும் பாடினார்.
 -சேக்கிழார்.
 |  |