பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)29. மேலைத் திருக்காட்டுப்பள்ளி601

  காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே.    10

3117. பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
  அருமறை யவைவல் வணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே.    11

திருச்சிற்றம்பலம்


யானவை அல்ல, மேகம் தவழும், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த
திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை
நாள்தோறும் சீலத்தால் தொழுது போற்ற இன்பம் வந்தடையும்.

     கு-ரை: போதி-அரசமரம். கௌதம புத்தர் அம்மரத்தினடியில் இருந்து
ஞானம் அடைந்தமைபற்றி அதனைப் போற்றுவர் புத்தர். பிண்டி - அசோகு.
அருகக்கடவுள் அம்மர நிழலில் உளன் என்பர் சமணர்.

     வாதினால் உரை அவை - வாதினால் உரைக்கும் அச்சொற்கள். ஏர்
- அழகு; சிவவேடம். இப்பாடல் குறிலெதுகை.

     11. பொ-ரை: நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட
சீகாழியில் அவதரித்த. அருமறைகளில் வல்ல, சிவஞானத்தையே
ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன், நீலமணி போன்ற கண்டத்தையுடைய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை
வணங்கிப் போற்றிய இத்திருப்பதிகத்தை ஓத, பாவம் நீங்கும்.

     கு-ரை: புறவம் - சீகாழி. கருமணி - நீலமணி போன்ற. மிடற்றினன் -
கண்டத்தை யுடையவன். பரவிய - துதித்த. பறையும் - நீங்கும்.