| 
         
          |  | காரினார் 
            கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே.    10
 |  
         
          | 3117. | பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன் |   
          |  | அருமறை யவைவல் வணிகொள்சம் பந்தன்சொல் கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
 பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே.    11
 |   
        திருச்சிற்றம்பலம் 
       
	   
  யானவை அல்ல, மேகம் 
        தவழும், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை
 நாள்தோறும் சீலத்தால் தொழுது போற்ற இன்பம் வந்தடையும்.
       கு-ரை: 
        போதி-அரசமரம். கௌதம புத்தர் அம்மரத்தினடியில் இருந்து ஞானம் அடைந்தமைபற்றி அதனைப் போற்றுவர் புத்தர். பிண்டி - அசோகு.
 அருகக்கடவுள் அம்மர நிழலில் உளன் என்பர் சமணர்.
      வாதினால் 
        உரை அவை - வாதினால் உரைக்கும் அச்சொற்கள். ஏர் - அழகு; சிவவேடம். இப்பாடல் குறிலெதுகை.
       11. 
        பொ-ரை: நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட சீகாழியில் அவதரித்த. அருமறைகளில் வல்ல, சிவஞானத்தையே
 ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன், நீலமணி போன்ற கண்டத்தையுடைய
 சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை
 வணங்கிப் போற்றிய இத்திருப்பதிகத்தை ஓத, பாவம் நீங்கும்.
       கு-ரை: 
        புறவம் - சீகாழி. கருமணி - நீலமணி போன்ற. மிடற்றினன் - கண்டத்தை யுடையவன். பரவிய - துதித்த. பறையும் - நீங்கும்.
 |