பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)31. திருமயேந்திரப்பள்ளி613

3139. வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
  நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென நாவினா னவில்பவர்
உம்பரா ரெதிர்கொள வுயர்பதி யணைவரே.   11

திருச்சிற்றம்பலம்


வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.

     கு-ரை: உடை துறந்தவர் - சமணர். உடைதுவர் உடையவர் -
மருதந்துவரினால் தோய்த்த காவி உடையையுடைய புத்தர். துவர் - இங்கு
மருதந்துவர் மஞ்சட்காவியை யுணர்த்திற்று. மயேந்திரப் பள்ளியுள்; இடம்
உடை - தனக்கு இடமாக உறைதலையுடைய முடை - தீ நாற்றம்.

     11. பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய
திருமயேந்திரப் பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின்
வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய
இத்திருப்பதிகத்தை 'இது நம்முடைய கடமை' என்ற உறுதியுடன் நாவினால்
பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த
இடத்தினை அடைவார்கள்.

     கு-ரை: நம்பரம் - நமது கடமை. பரம் - பாரம். வம்பு - மணம்.
உம்பர் + ஆர் = தேவர்.

திருஞானசம்பந்தர் புராணம்

வைகும்அந் நாளிற் கீழ்பால் மயேந்திரப் பள்ளி வாசம் செய்பொழிற் குருகா வூருந் திருமுல்லை வாயில் உள்ளிட்
டெய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

                                 -சேக்கிழார்.