பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)35. திருத் தென்குடித்திட்டை631

35. தென்குடித்திட்டை

பதிக வரலாறு:

     செப்பரிய புகழுடைய திருவாடானை சேர்ந்து செந்தமிழ் மாலைகள்
சாத்தியவரும் உலகுய்ய ஞானம் உண்டவரும் ஆகிய திருஞானசம்பந்த
சுவாமிகள், சிவனார் மன்னும் ஒப்பரிய புனவாயில் போற்றிசெய்து வணங்கிப்
பாடியருளியது இத் திருப்பதிகம்.

பண்: கொல்லி

ப.தொ.எண்: 293   பதிக எண்: 35

திருச்சிற்றம்பலம்

3170. முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும்
  தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.     1

3171. மகரமா டுங்கொடி மன்மத வேடனை
  நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
பகரவா ணித்திலம் பன்மக ரத்தொடும்
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.     2


     1. பொ-ரை: நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில்
தொழுது போற்ற, உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன்
திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும்
வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும்.

     கு-ரை: தன்னதாள் - தன்னுடைய திருவடிகள். அகரம் - ஆறன்
உருபு “மன்னுமா காவிரி,”

     2. பொ-ரை: மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு
நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வாள் போல் மின்னும்
முத்துக்களும், பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று