பதிக வரலாறு:
செப்பரிய
புகழுடைய திருவாடானை சேர்ந்து செந்தமிழ் மாலைகள்
சாத்தியவரும் உலகுய்ய ஞானம் உண்டவரும் ஆகிய திருஞானசம்பந்த
சுவாமிகள், சிவனார் மன்னும் ஒப்பரிய புனவாயில் போற்றிசெய்து வணங்கிப்
பாடியருளியது இத் திருப்பதிகம்.
பண்: கொல்லி
ப.தொ.எண்: 293 |
|
பதிக
எண்: 35 |
திருச்சிற்றம்பலம்
3170. |
முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும் |
|
தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே. 1 |
3171. |
மகரமா டுங்கொடி மன்மத வேடனை |
|
நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
பகரவா ணித்திலம் பன்மக ரத்தொடும்
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே. 2 |
1.
பொ-ரை: நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில்
தொழுது போற்ற, உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன்
திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும்
வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும்.
கு-ரை:
தன்னதாள் - தன்னுடைய திருவடிகள். அகரம் - ஆறன்
உருபு மன்னுமா காவிரி,
2.
பொ-ரை: மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு
நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வாள் போல் மின்னும்
முத்துக்களும், பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று
|