| 
       பதிக வரலாறு:      செப்பரிய 
        புகழுடைய திருவாடானை சேர்ந்து செந்தமிழ் மாலைகள் சாத்தியவரும் உலகுய்ய ஞானம் உண்டவரும் ஆகிய திருஞானசம்பந்த
 சுவாமிகள், சிவனார் மன்னும் ஒப்பரிய புனவாயில் போற்றிசெய்து வணங்கிப்
 பாடியருளியது இத் திருப்பதிகம்.
 பண்: கொல்லி 
         
          | ப.தொ.எண்: 293 |  | பதிக 
            எண்: 35 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3170. | முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும் |   
          |  | தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம் மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
 செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.     1
 |  
         
          | 3171. | மகரமா டுங்கொடி மன்மத வேடனை |   
          |  | நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம் பகரவா ணித்திலம் பன்மக ரத்தொடும்
 சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.     2
 |  
       1. 
        பொ-ரை: நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற, உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன்
 திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்
 இடமாவது, காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும்
 வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும்.
       கு-ரை: 
        தன்னதாள் - தன்னுடைய திருவடிகள். அகரம் - ஆறன் உருபு மன்னுமா காவிரி,
       2. 
        பொ-ரை: மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற
 சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வாள் போல் மின்னும்
 முத்துக்களும், பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று
 |