பக்கம் எண் :

642திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.  10

3189. அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார்
  சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.     11

திருச்சிற்றம்பலம்


இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுங்கள். வளமுடன்
ஓங்கும் வள்ளலாகிய திருக்காளத்திநாதனை உள்ளத்தால் உணர்ந்து
மனம் ஒன்றி வழிபட்டால் தேவர்களுக்கெல்லாம் தலைவனான
அச்சிவபெருமான், வழிபடும் உயிர்களின் வினைகளைத் தீர்த்து
நன்மை செய்வான்.

     கு-ரை: வீங்கிய உடலினர் - சமணர். விடும் - ஒழியுங்கள்.
பன்மையேவல் வினைமுற்று. வாங்கிடும் - நீக்கிடும்.

     11. பொ-ரை: அட்டமா சித்திகளைத் தரும் திருக்காளத்தியில்
வீற்றிருந்தருளும் நீண்ட சடைமுடியுடைய சிவபெருமானைப் போற்றி,
வயல் வளமிக்க அழகிய சீகாழியில் அவதரித்த நான்கு வேதங்களையும்
நன்கு கற்றுவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி
ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

     கு-ரை: அட்டமாசித்திகளாவன; அணிமா - சிறியதிற் சிறிதாதல்,
மகிமா - பெரியதிற் பெரிதாதல் அண்டங்களெல்லாம் அணு ஆதல்,
அணுக்கள் எல்லாம் அண்டங்கள் ஆதல் (திருவிளையாடற் புராணம்).
லகிமா - மிகத் திண்ணியபொருளை மிக நொய்ய பொருளாக்குதல்.
கரிமா - மிக நொய்ய பொருளை மிகத் திண்ணிய பொருளாக்குதல்.
பிராத்தி - பாதாளத்திலிருப்பவன்; அடுத்த நிமிடம் வானுலகிலும்
காணப்படுதல். பிராகாமியம் - பரகாயப் பிரவேசம். (வேற்று உடலில்
புகுதல். இருந்த இடத்திலிருந்தே எண்ணிய போகமெல்லாம் அடைதல்).
ஈசத்துவம் - சிவபெருமானைப்போல முத்தொழிலையும் செய்து நாள்
கோள் முதலியவை தம் ஏவல் கேட்ப இருப்பது. வசித்துவம் -
அனைத்துயிரும் அனைத்துலகும் தன் வசமாகச் செய்தல். கோளில் ...
எண்குணத்தான் என்ற தொடருக்குப் பிறர் கருத்தாகப் பரிமேலழகர்
இவற்றையும் காட்டினர். இச்சித்திகள் இன்றும் இத்தலத்துக் காணலாகும்
என்பர். சிட்டம் - முறைமை, ஒழுக்கம்.