| 
         
          |  | ஓங்குவண் 
            காளத்தி யுள்ளமோ டுணர்தர வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.  10
 |  
         
          | 3189. | அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார் |   
          |  | சடையனை வயலணி காழியான் சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
 இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.     11
 |   
        திருச்சிற்றம்பலம் 
       
  இறைவனுடைய திருவடிகளை 
        வணங்கிப் போற்றுங்கள். வளமுடன் ஓங்கும் வள்ளலாகிய திருக்காளத்திநாதனை உள்ளத்தால் உணர்ந்து
 மனம் ஒன்றி வழிபட்டால் தேவர்களுக்கெல்லாம் தலைவனான
 அச்சிவபெருமான், வழிபடும் உயிர்களின் வினைகளைத் தீர்த்து
 நன்மை செய்வான்.
       கு-ரை: 
        வீங்கிய உடலினர் - சமணர். விடும் - ஒழியுங்கள். பன்மையேவல் வினைமுற்று. வாங்கிடும் - நீக்கிடும்.
       11. 
        பொ-ரை: அட்டமா சித்திகளைத் தரும் திருக்காளத்தியில் வீற்றிருந்தருளும் நீண்ட சடைமுடியுடைய சிவபெருமானைப் போற்றி,
 வயல் வளமிக்க அழகிய சீகாழியில் அவதரித்த நான்கு வேதங்களையும்
 நன்கு கற்றுவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி
 ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
       கு-ரை: 
        அட்டமாசித்திகளாவன; அணிமா - சிறியதிற் சிறிதாதல், மகிமா - பெரியதிற் பெரிதாதல் அண்டங்களெல்லாம் அணு ஆதல்,
 அணுக்கள் எல்லாம் அண்டங்கள் ஆதல் (திருவிளையாடற் புராணம்).
 லகிமா - மிகத் திண்ணியபொருளை மிக நொய்ய பொருளாக்குதல்.
 கரிமா - மிக நொய்ய பொருளை மிகத் திண்ணிய பொருளாக்குதல்.
 பிராத்தி - பாதாளத்திலிருப்பவன்; அடுத்த நிமிடம் வானுலகிலும்
 காணப்படுதல். பிராகாமியம் - பரகாயப் பிரவேசம். (வேற்று உடலில்
 புகுதல். இருந்த இடத்திலிருந்தே எண்ணிய போகமெல்லாம் அடைதல்).
 ஈசத்துவம் - சிவபெருமானைப்போல முத்தொழிலையும் செய்து நாள்
 கோள் முதலியவை தம் ஏவல் கேட்ப இருப்பது. வசித்துவம் -
 அனைத்துயிரும் அனைத்துலகும் தன் வசமாகச் செய்தல். கோளில் ...
 எண்குணத்தான் என்ற தொடருக்குப் பிறர் கருத்தாகப் பரிமேலழகர்
 இவற்றையும் காட்டினர். இச்சித்திகள் இன்றும் இத்தலத்துக் காணலாகும்
 என்பர். சிட்டம் - முறைமை, ஒழுக்கம்.
 |