பக்கம் எண் :

650திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

38. திருக்கண்டியூர் வீரட்டம்

பதிக வரலாறு:

     சண்பையாளியார், திருப்பூந்துருத்திப் பொய்யிலியாரைப் பணிந்து
போற்றித், திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எப்பொழுதும் தொழுது
திருக்கண்டியூர் தொழச் சொன்று அணைந்து வீரட்டர் கோயில் எய்திக்
கலந்து, காதல் பொங்கித்தாழ்ந்து இறைஞ்சித் தொடுத்த இசைத்தமிழ்மாலை
இத்திருப்பதிகம்.

வினாவுரை
பண்: கொல்லி

ப.தொ.எண்:296   பதிக எண்: 38

திருச்சிற்றம்பலம்

3200. வினவினேனறி யாமையில்லுரை
       செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை
     மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம
     ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்
     வையமாப்பலி தேர்ந்ததே.              1


     1. பொ-ரை: இறையருளை வேண்டிய பணிசெய்யும் அன்பர்காள்!
அறியாமை காரணமாக வினவுகின்றேன். உரைசெய்வீர்களாக! ஆரவாரத்தோடு
மிகுந்தநீர் செல்லும் காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில்
வீற்றிருந்தருளும் வீரட்ட நாதன், தனக்கு நெருக்கமான திருமாலும், பிரமனும்
அண்டங்களை ஆளத் தான் சுடுகாட்டில் வாழ்ந்து ஆடியும், பாடியும்
பிச்சையேற்றுத் திரிவது ஏன்? தனக்கு முன்னோர் தேடிவைத்த பொருள்
இல்லாத காரணத்தினாலா?

     கு-ரை: கனைவு - வேகம். கண்டியூர் வீரட்டன். தமர் ஆயினார் -
தம்தம் இனத்தவரான பிரம விட்டுணுக்கள். அண்டம் ஆளத்தான் வனத்தில்
குடியிருந்து இவ்வுலகில் பெரிய பிச்சை எடுப்பது. முன்னே தனம் -
முன்னோர் தேடிவைத்த பொருள், தனக்கு இல்லாமையாலோ? அவன்
அருளை வேண்டிப் பணிசெய்யும் அடிகளீர், நீர்