| 3235. |
கலியார்கச்சி, மலியேகம்பம் |
| |
பலியாற்போற்ற,
நலியாவினையே. 3 |
| 3236. |
வரமார்கச்சிப், புரமேகம்பம் |
| |
பரவாவேத்த,
விரவாவினையே. 4 |
| 3237. |
படமார்கச்சி, இடமேகம்பத் |
| |
துடையாயென்ன, அடையாவினையே. 5 |
| 3238. |
நலமார்கச்சி, நிலவேகம்பம் |
| |
குலவாவேத்தக்,
கலவாவினையே. 6 |
3.
பொ-ரை: விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எப்பொழுதும்
விளங்கும் கச்சியில் வீற்றிருந்தருளுகின்ற திருவேகம்பநாதரைப் பூசைக்குரிய
பொருள்களைக் கொண்டு பூசை செய்து போற்றி வழிபடத் தீவினையால்
வரும் துன்பம் இல்லை.
கு-ரை:
கலி ஆர் - ஓசைமிக்குடைய கச்சி, இதனை 'மலிதேரான்'
என்ற தண்டியலங்கார உதாரணச் செய்யுளாலும், பெரிய புராணத்தாலும்
அறியலாம். பலி - பூசைக்குரிய பொருள்; காரிய ஆகுபெயர்.
4.
பொ-ரை: தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை
நல்கும் தெய்வத்தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும். இத்திருத்தலத்தில்
திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற வினை தொடராது நீங்கும்
. கு-ரை:
பரவா - பரவி, துதித்து, உடன்பாட்டு வினையெச்சம்.
கச்சிப்புரம் - காஞ்சிபுரம்.
5.
பொ-ரை: சித்திர வேலைப்பாடுகளையுடைய அழகிய கச்சியை
இடமாகக் கொண்டு திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் எங்கள்
தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது.
கு-ரை:
படம்-மாடங்களில் ஆடும் கொடியினையுடைய. உடையாய் -
தலைவனே. என்ன வினை அடையா.
6.
பொ-ரை: நலம் தரும் கச்சிநகரில் விளங்குகின்ற திருவேகம்பத்தை
அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை நீங்கும்.
|