| 
       பதிக வரலாறு:      பதிகவரலாறு இல்லாதவற்றுள் இதுவும் ஒன்று.  பண்: கௌசிகம் 
         
          | ப.தொ.எண்:301 |  | பதிக 
            எண்: 43 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3255. | சந்த மார்முலை யாடன கூறனார் |   
          |  | வெந்த 
            வெண்பொடி யாடிய மெய்யனார் கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
 எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.           1
 |  
         
          | 3256. | மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத் |   
          |  | தேனி 
            டங்கொளுந் கொன்றையந் தாரினார் கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
 ஊனி டங்கொண்டெ னுச்சியி னிற்பரே.         2
 |  
       1. 
        பொ-ரை: இறைவர் அழகிய திருமுலைகளையுடைய உமாதேவியாரைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். வெந்த
 திருவெண்ணீற்றினைப் பூசிய திருமேனி உடையவர். நறுமணம் கமழும்
 சோலைகள் சூழ்ந்த சீகாழியுள் வீற்றிருந்தருளிய என் தந்தையாராகிய
 சிவபெருமானின் திருவடிகள் என் மனத்தில் நன்கு பதிந்துள்ளன.
       கு-ரை: 
        முலையாள் தனகூறனார்; தன - தன்னதாகிய. இது குறிப்புப் பெயரெச்சம். கந்தம் - நறுமணம். ஈற்றடி, திருக்காளத்தி முதற் பாட்டின்
 (தி.3ப.36பா.1.) ஈற்றடியிலும் சிறிது மாறி வருகிறது.
       2. 
        பொ-ரை: மானை இடக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் நீண்ட சிவந்த சடைமுடியின்மீது, தேன் துளிக்கும் கொன்றைமாலையை அணிந்தவர்.
 நறுமணம் திகழும் குளிர்ந்த வயல்களையுடைய சீகாழியில் வீற்றிருந்தருளும்
 அப்பெருமான் இந்த உடலை இடமாகக் கொண்டு எனது உச்சியில் நிற்பர்.
 |