| 
         
          | 3308. | செந்தெ னாமுர லுந்திரு வாலவாய் |   
          |  | மைந்த 
            னேயென்று வல்லம ணாசறச் சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
 பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே.          11
 |  
        
        திருச்சிற்றம்பலம்
       
 
             கு-ரை: 
        மீன் கவர்வார் புத்தர். அழிப்பவர் - நன்மார்க்கங்களை யெல்லாம் அழிப்பவர்கள். தெழிக்கும் - ஒலிக்கின்ற. பூம்புனல் - மெல்லிய
 நீர். நல்கிடே - தெரிவித்தருள்வீராயின்.
       11. 
        பொ-ரை: வண்டுகள் முரலும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் மைந்தனே என்று விளித்து வலிய அமணர்களின் நெறிகளிலுள்ள குற்றங்கள்
 நீங்கச் சந்தமுடைய தழிழால் இறைவன் திருவுள்ளம் யாது எனக் கேட்ட
 மெய்ஞ்ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பழிநீங்க
 ஓதுவீர்களாக!
       கு-ரை: 
        தமிழ்கேட்ட - தமிழாற் கேட்ட என்பது ஒவ்வொரு பாடலிலும் திருயுள்ளமேயெனக் கேட்டமையைக் குறிக்கிறது. பழி நீங்கப் பகருமின் -
 பழி நீங்குவதற்குச் சொல்வீராக.
 
         
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  நோக்கிட 
              விதியி லாரை நோக்கியான் வாது செய்யத்தீக்கனல் மேனி யானே! திருவுள மேஎன் றெண்ணில்
 பாக்கியப் பயனா யுள்ள பாலறா வாயர் மெய்ம்மை
 நோக்கிவண் டமிழ்செய் மாலைப் பதிகத்தான் நுவல லுற்றார்.
 |  
          |  |   
          | கானிடை ஆடு வாரைக் காட்டுமா வுரி முன் பாடித்தேனலர்
 கொன்றை யார்தந் திருவுளம் நோக்கிப் பின்னும்
 ஊனமில் வேத வேள்வி என்றெடுத் துரையின் மாலை
 மானமில் அமணர் தம்மை வாதில்வென் றழிக்கப் பாடி.
 -சேக்கிழார்.
 |  |