| 
         
          | 3333. | பரந்த நீலப் படரெரி வல்விடம் |   
          |  | கரந்த 
            கண்டத்தி னான்கரு தும்மிடம் சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
 நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.         3
 |  
         
          | 3334. | தவந்த வென்புந் தவளப் பொடியுமே |   
          |  | உவந்த மேனியி னானுறை யும்மிடம் |  
  மகளும், அந்தணர்களும் 
        விளங்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும். அத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
       கு-ரை: 
        காலன் இதயத்துத் திகழுதல் அச்சத்தால்; என் உள் (உள்ளம்) திகழுதல் அன்பினால்; இக்கருத்தை அஞ்சியாகிலும்,
 அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ என்னும் அப்பர்
 வாக்கால் அறிக. காலனறிந்தான் அறிதற்கரியான் கழலடியே என அவர்
 பாராட்டுவதாலும் அறிக. புகழ் - உபலட்சணத்தால் புண்ணியத்தையும்
 தழுவும். பூமகள் - இலக்குமி. செல்வமிகுதியால் (பழிபாவங்கள்
 ஈட்டுதலின்றிப்) புகழ் புண்ணியங்களையீட்டுந் தன்மையை உடைய பூசுரர்
 என்பது மூன்றாம் அடியின் குறிப்பு. நிகழும் - வசிக்கின்ற.
       3. 
        பொ-ரை: விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டனாக இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது,
 ஓடையில் எருமை படிந்து பால் சொரியும் வளமிக்க திருத்தண்டலை
 நீள்நெறியாகும். அங்கு அப்பெருமானை வணங்கி வழிபடுங்கள்.
       கு-ரை: 
        பரந்த - பரவிய. எரிவல்விடம் - கொதிக்கும் வலிய நஞ்சு. சுரந்த - பால்சுரந்த, (மடியினையுடைய.) மேதி - எருமைகள். மேதி -
 பால்பகா அஃறிணைப்பெயர். சுரந்த மேதி - சினைவினை முதல்
 மேலேற்றப்பட்டது. சொரிந்த பால் ஓடையில். நிரந்த - பரவித் தோன்றும்,
 தண்டலை நீணெறி என்க. (ஓடையில்) நிரந்த என்ற எச்சத்திற்குச் (சொரிந்த)
 பால் என்னும் வினைமுதல் வருவித்து உரைக்கப்பட்டது. காலுண்ட சேற்று
 மேதிக் கன்றுள்ளி கனைப்பச் சோர்ந்த பால் (கம்பராமாயணம் -
 நாட்டுப்படலம். 13) என்ற கவியின் கருத்துக் கொள்க. நிரந்த - இயல்பு
 பற்றிய கால வழுவமைதி.
       4. 
        பொ-ரை: வெந்த எலும்பும், திருவெண்ணீறும் உவந்து திருமேனியில் தரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,
 |