பக்கம் எண் :

724திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3333. பரந்த நீலப் படரெரி வல்விடம்
  கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடம்
சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.         3

3334. தவந்த வென்புந் தவளப் பொடியுமே
  உவந்த மேனியி னானுறை யும்மிடம்


மகளும், அந்தணர்களும் விளங்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும்.
அத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

     கு-ரை: காலன் இதயத்துத் திகழுதல் அச்சத்தால்; என் உள்
(உள்ளம்) திகழுதல் அன்பினால்; இக்கருத்தை “அஞ்சியாகிலும்,
அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ” என்னும் அப்பர்
வாக்கால் அறிக. “காலனறிந்தான் அறிதற்கரியான் கழலடியே” என அவர்
பாராட்டுவதாலும் அறிக. புகழ் - உபலட்சணத்தால் புண்ணியத்தையும்
தழுவும். பூமகள் - இலக்குமி. செல்வமிகுதியால் (பழிபாவங்கள்
ஈட்டுதலின்றிப்) புகழ் புண்ணியங்களையீட்டுந் தன்மையை உடைய பூசுரர்
என்பது மூன்றாம் அடியின் குறிப்பு. நிகழும் - வசிக்கின்ற.

     3. பொ-ரை: விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக்
கண்டத்தில் தேக்கி நீலகண்டனாக இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது,
ஓடையில் எருமை படிந்து பால் சொரியும் வளமிக்க திருத்தண்டலை
நீள்நெறியாகும். அங்கு அப்பெருமானை வணங்கி வழிபடுங்கள்.

     கு-ரை: பரந்த - பரவிய. எரிவல்விடம் - கொதிக்கும் வலிய நஞ்சு.
சுரந்த - பால்சுரந்த, (மடியினையுடைய.) மேதி - எருமைகள். மேதி -
பால்பகா அஃறிணைப்பெயர். சுரந்த மேதி - சினைவினை முதல்
மேலேற்றப்பட்டது. சொரிந்த பால் ஓடையில். நிரந்த - பரவித் தோன்றும்,
தண்டலை நீணெறி என்க. (ஓடையில்) நிரந்த என்ற எச்சத்திற்குச் (சொரிந்த)
பால் என்னும் வினைமுதல் வருவித்து உரைக்கப்பட்டது. ‘காலுண்ட சேற்று
மேதிக் கன்றுள்ளி கனைப்பச் சோர்ந்த பால்’ (கம்பராமாயணம் -
நாட்டுப்படலம். 13) என்ற கவியின் கருத்துக் கொள்க. நிரந்த - இயல்பு
பற்றிய கால வழுவமைதி.

     4. பொ-ரை: வெந்த எலும்பும், திருவெண்ணீறும் உவந்து
திருமேனியில் தரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,