| 
       பதிக வரலாறு:      திருவாரூர்த் 
        தியாகராசப்பெருமானை வணங்கிப் போய்த் திருக்காறாயில் திருத்தேவூர் முதலிய பலவற்றைப் பரவிப் பாடி,
 திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த, கற்றவர் வாழ் தண்டலை
 நீணெறி உற்றுப்போற்றியது இத் திருப்பதிகம்.
 பண்: கௌசிகம் 
         
          | ப.தொ.எண்:308 |  | பதிக 
            எண்: 50 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3331. | விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே |   
          |  | சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடம் கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
 நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.     1
 |  
       
         
          | 3332. | இகழுங் 
            கால னிதயத்து மென்னுளும் |   
          |  | திகழுஞ் 
            சேவடி யான்றிருந் தும்மிடம் புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
 நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே.        2
 |  
       1. 
        பொ-ரை: விரும்பப்படுகின்ற சந்திரனையும், கங்கையையும் தாங்கி, சுரும்பு, தும்பி ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடியுள்ள சடை முடியை
 யுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது கரும்பும், செந்நெலும், பாக்கு
 மரங்களும் நிறைந்து வளம் கொழிக்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும்.
 இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
       கு-ரை: 
        விரும்பும் - விரும்பப்படுவதாகிய. திங்களும் - சந்திரனும். (கங்கையும்). விம்ம - பொலிவு அடைய. வெறுக்கப்படும் தன்மைவாய்ந்தது,
 பின்கடவுள் அணிதலால் விரும்பப்படுவதாயிற்று. சுரும்பு, தும்பி, இவை
 வண்டின் சாதி விசேடம். மலரின் நறு மணத்துக்காகச் சூழ்கின்றன.
       2. 
        பொ-ரை: சிவபக்தரான மார்க்கண்டேயரை மதியாது இகழ்ந்த காலனின் இதயத்துள்ளும், என்னுள்ளும் திகழும், சிவந்த திருவடிகளை
 யுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும்இடம், புகழுடைய திரு
 |