| 3389. |
நீதி நின்னையல்லா னெறியாதும் |
| |
நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்றலை
யொன்றினையும்
சேதீ சேதமில்லாத் திருவான்மி
யூருறையும்
ஆதீ யுன்னையல்லா லடையாதென
தாதரவே. 6 |
| 3390. |
வானார் மாமதிசேர் சடையாய்வரை |
| |
போலவரும்
கானா ரானையின்றோ லுரித்தாய்கறை
மாமிடற்றாய்
|
திருவான்மியூரில்
வீற்றிருந்தருளும் தந்தையே! உன்னையல்லால் என்மனம்
வேறெதையும் ஆதரவாக அடையாது.
கு-ரை:
எண் ஆர் - பாராட்டுதற்குரிய, பொடி நீறு - பொடியாகிய
திருநீறு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அண்ணா - தந்தையே,
திசைச்சொல். அண்ணல் என்பதன் விளியுமாம்.
6.
பொ-ரை: நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே நினைப்பதல்லாமல்
உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை அறிந்திலேன். நால்வேதங்களை
அருளிச் செய்தவனே! பிரமன் தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே!
எத்தகைய குறைவுமின்றி வளம் பொருந்திய திருவான்மியூரில்
வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும்
ஆதரவாக அடையாது.
கு-ரை:
நீதிவடிவாயுள்ளவனே, உன்னையே நினைப்பதல்லாமல்
உன்னை வழிபடுவதற்குரிய முறை எதனையும் நினைந்தறியேன் என்பது
முதலடிக்குப் பொருள். ஓதிநான்மறைகள் - நான்கு வேதங்களையும்
ஓதினவனே, சேதீ - சேதித்தவனே, சேதித்தல் - வெட்டுதல்,
(நகத்தாற்கிள்ளினமை.) ஆதீ - முதல்வனே.
7.
பொ-ரை: வானில் விளங்கும் சந்திரனைச் சடையில் தரித்தவனே!
மலைபோல வரும் பாட்டிலுள்ள யானையின் தோலை உரித்தவனே!
நஞ்சுண்டு கறுத்த கண்டத்தையுடையவனே! தேன்
|