பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)59. திருக்குடமூக்கு795

3431. வடிவுடை வாட்டடங்கண் ணுமை யஞ்சவோர்
       வாரணத்தைப்
பொடியணி மேனிமூட வுரி கொண்டவன்
     புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங் குழ கன்குட
     மூக்கிடமா
இடிபடு வானமேத்த விருந் தானவ
     னெம்மிறையே.     5


எத்தன்மேயோரும் போற்றி வணங்க வீற்றிருந்தருளுகின்றான். அவனே
யாம் வணங்கும் கடவுளாவான்.

     கு-ரை: அரை - இடுப்பில். மிக்கு - மிகவும். தாழ - தொங்க.
வேங்கை உரி - வேங்கைத்தோலை. ஆர்த்து - கட்டி. அக்கு - அக்குப்
பாசி. அரவு, ஆமையோடு. ஏனம் - பன்றியின். மருப்பு - கொம்பு.
கொக்கரை முதலிய வாச்சியங்களோடு எக்கரையாரும், தீவிலுள்ளவர்களும்,
ஏத்த இருந்தான். இறைவனுக்குப் புலித்தோல் உடையும், கரித்தோல்
போர்வையும், சிங்கத்தோல் ஏகாசமுமாம் என்பர். ஆமை - முதலாகுபெயர்.
கரை - தீவு. சம்புத்தீவன்றிப் பிற தீவிலுள்ளவர்களும்.

     5. பொ-ரை: அழகிய உருவமுடைய வாள்போன்ற ஒளி பொருந்திய
அகன்ற கண்களையுடைய உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை
உரித்து, திருவெண்ணீறணிந்த திருமேனிமீது போர்த்தவனும்,
சடைமுடியுடையவனும், அழகனும் ஆன சிவபெருமான், கொடிகள்
அசைகின்ற ஆகாயத்தைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள நீண்ட மாடங்கள்
நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வானவர்கள் போற்ற
வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.

     கு-ரை: வடிவு உடை - அழகிய உருவமுடைய. வாரணம் -
யானையை. உரிகொண்டவன் - உரித்தவன். இடிபடு - இடியையுடைய.
வானம் - வானுலகில் உள்ளவர்களும். ஏத்த இருந்தான்.

     மேக மண்டலம் வானிற் காணப்படுதலால் அதன் கண்படும் இடியை,
வானத்தின் மீது ஏற்றப்பட்டது. இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்
மேல் ஏற்றப்பட்டது.