பக்கம் எண் :

902திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  முன்னைவினை போய்வகையி னான்முழு
                         துணர்ந்துமுயல்
     கின்றமுனிவர்
மன்னவிரு போதுமரு வித்தொழுது சேரும்வயல்
     வைகாவிலே.                          4

3563. வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி
       யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ
     யொருவனிடமாம்
மேதகைய கேதகைள் புன்னையொடு ஞாழலவை
     மிக்கவழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில்
     வைகாவிலே.                         5


அருளோடு வீற்றிருந்தருளும் இடம், முன்னை வினைகளெல்லாம் நீங்க,
அவனை வணங்கும் நெறிகளை முறைப்படி முழுவதும் உணர்ந்து நிட்டைகூட
முயல்கின்ற முனிவர்கள் காலை, மாலை என்ற இருவேளைகளிலும் சென்று
தொழுது போற்றும், வயல்வளம் பொருந்திய திருவைகாவூர் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: இன்ன உரு - இன்னவடிவம் (இன்ன நிறம் என்று) அறிவதேல்
அரிது - ஆன்மபோதத்தினால் அறிவதானால் அறிய முடியாது. நீதிபலவும் -
பலவாகிய புண்ணியங்களெல்லாம், (தன்ன உருவு ஆண் என) மிகுத்ததவன் -
மிகுந்த தவக்கோலத்தையுடையவன், நீதியோடு - அருளொடு. தான் அமர்வு
இடம் - தான் விரும்புதலையுடைய இடமாகும். முன்னை வினை போய் -
முற்பிறப்பில் செய்த வினைகள் நீங்க. வகையினால் - முறைமைப்படி
முழுதுணர்ந்து - முழுவதும் அறிந்து, முயல்கின்ற - (நிட்டை கூடுதற்கு)
முயல்கின்ற. முனிவர் - முனிவர்கள். மன்ன - நிலைபெறும்படியான,
இருபோதும் - இருவேளையும், மருவி - அடைந்து. தொழுதுசேரும் -
தொழுது சேர்கின்ற, வயல் - வயல் வளம் பொருந்திய வைகாவில்.

     5. பொ-ரை: வேதங்களை ஓதியும், ஓதுவித்தும், வேள்விகள் பல
செய்தும், விதிப்படி ஆறு சமயநூல்களைக் கற்றும், உணர்ந்தும் உள்ள
பூவுலகதேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் தொழ அவர்கட்கு
அருள்செய்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,