|   | 
          தேசமதெ 
            லாமருவி நின்றுபர வித்திகழ 
                 நின்றபுகழோன் 
            வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் 
                 வைகாவிலே.                       10 | 
         
       
	
         
          | 3569.  | 
          முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை | 
         
         
          |   | 
                    காவிலதனை 
            செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் 
                 பந்தனு ரைசெய் 
            உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ 
                 ருருத்திரரெனப் 
            பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ 
                 ரும்புகழொடே.                   11 | 
         
       
       
        திருச்சிற்றம்பலம்
        
       புத்தர்கள் இவர்களின் 
        சித்தத்தில் புகாத அப்பெருமான் வீற்றிருந்தருளும்  
        இடமாவது, எல்லா தேசத்தாரும் கூடிநின்று போற்ற, நிலைத்த புகழுடைய  
        அப்பெருமானை நறுமணமிக்க நல்மலர்களைத் தூவி வழிபட நற்கதிதரும்  
        திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும். 
            கு-ரை: 
        பேசுதல் செயா - பேசாத, சித்தம் அணையா - மனத்திற்  
        புகுதாத. அவனது - அத்தகையானது. (இடம்) தேசம் அது எலாம் - எல்லாத்  
        தேசத்தினரும், மருவிநின்று - பொருந்திநின்று, பரவி - துதித்து, திகழ நின்ற  
        புகழோன் - புகழ் நிலைத்து விளங்குவோனாகிய சிவபெருமானை.  
        வாசமலரான பல தூவி - வாசமிக்க பல மலர்களைத் தூவி (ஆன  
        சொல்லுருபு) அணையும் - வந்து சேரும் பதியாகிய, நல்வைகாவில், தேசமது  
        எலாம் மருவிநின்று பரவி வாசமலரான பல தூவித் திகழநின்ற  
        புகழோனையணையும் பதியெனக் கூட்டுக. ஆன - பூசைக்குரியவாகிய  
        எனினும் ஆம். பூத்தேர்ந் தாயன கொண்டு என முன்வந்தது. பல  
        வகையான மலர் என்றும் கொள்க. அது பரந்து பல்லாய் மலர் இட்டு  
        என்னும் திருவாசகக் (தி.8) கருத்து.  
           11. 
        பொ - ரை: முழுவதுமாய் நம்மை ஆட்கொண்ட முக்கண்ணுடைய  
        முதல்வனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவைகாவில் என்னும்  
        திருத்தலத்தைப் போற்றி, தன்னையடைந்தோர் வினைகளை அழிக்கும்  
        சிரபுரத்தில் அவதரித்த தலைவனான  
	 |