| |
தேசமதெ
லாமருவி நின்றுபர வித்திகழ
நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல்
வைகாவிலே. 10 |
| 3569. |
முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை |
| |
காவிலதனை
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம்
பந்தனு ரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ
ருருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ
ரும்புகழொடே. 11 |
திருச்சிற்றம்பலம்
புத்தர்கள் இவர்களின்
சித்தத்தில் புகாத அப்பெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, எல்லா தேசத்தாரும் கூடிநின்று போற்ற, நிலைத்த புகழுடைய
அப்பெருமானை நறுமணமிக்க நல்மலர்களைத் தூவி வழிபட நற்கதிதரும்
திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும்.
கு-ரை:
பேசுதல் செயா - பேசாத, சித்தம் அணையா - மனத்திற்
புகுதாத. அவனது - அத்தகையானது. (இடம்) தேசம் அது எலாம் - எல்லாத்
தேசத்தினரும், மருவிநின்று - பொருந்திநின்று, பரவி - துதித்து, திகழ நின்ற
புகழோன் - புகழ் நிலைத்து விளங்குவோனாகிய சிவபெருமானை.
வாசமலரான பல தூவி - வாசமிக்க பல மலர்களைத் தூவி (ஆன
சொல்லுருபு) அணையும் - வந்து சேரும் பதியாகிய, நல்வைகாவில், தேசமது
எலாம் மருவிநின்று பரவி வாசமலரான பல தூவித் திகழநின்ற
புகழோனையணையும் பதியெனக் கூட்டுக. ஆன - பூசைக்குரியவாகிய
எனினும் ஆம். பூத்தேர்ந் தாயன கொண்டு என முன்வந்தது. பல
வகையான மலர் என்றும் கொள்க. அது பரந்து பல்லாய் மலர் இட்டு
என்னும் திருவாசகக் (தி.8) கருத்து.
11.
பொ - ரை: முழுவதுமாய் நம்மை ஆட்கொண்ட முக்கண்ணுடைய
முதல்வனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவைகாவில் என்னும்
திருத்தலத்தைப் போற்றி, தன்னையடைந்தோர் வினைகளை அழிக்கும்
சிரபுரத்தில் அவதரித்த தலைவனான
|