பக்கம் எண் :

908திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள்
உருத்திரர்களாகிச் சிவலோகத்தில் முத்தியின்பத்தில் இருந்து பிரியாது
புகழுடன் வாழ்வர்.

     கு - ரை: செற்ற - மிகுத்த. ம(ல்ல)லின் - வளங்களால், ஆர் -
நிறைந்த (செற்ற - தன்னையடைந்தோர் வினைகளை அழித்த, எனினும்
ஆம்.) சிரபுரத்தலைவன் - சீகாழித் தலைவராகிய, ஞானசம்பந்தர்,
உருத்திரர் எனப்பெற்று அமரலோக மிக உருத்திரர் ஆகி சிவலோகத்தில்.
பெரும் புகழோடு - பெரிய புகழ்ச்சிக்குரியதாகிய முத்தியின்போடு, பிரியார்
- நீங்காதவராகி மிக வாழ்வார் என்க. அமரன் - (சாவாதவன்)
சிவபெருமான் ஒருவர்க்கேயுரியது. “செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று,
பத்தி செய் மனப்பாறைகட்கேறுமோ” என்பதும் “சாவா மூவாச் சிங்கமே”
என்பதும் அப்பமூர்த்திகள் திருவாக்கு. (திருக்குறுந்தொகை:
திருத்தாண்டகம்). ஆகையால் அமரலோகம் என்பது சிவலோகத்தைக்
குறிக்கும்.

திருஞானசம்பந்தர் புராணம்

விசயமங் கையினிடம் அகன்று மெய்யர்தாள்
அவைவில்வை காவினில் அணைந்து பாடிப்போந்(து)
இசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.

                                 -சேக்கிழார்.

ஞானசம்பந்தர் தேவாரத்தில் இறைவனுக்குரிய
அபிடேகப் பொருள்கள்
“பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி” (தி.1.ப.61பா.5)
“தேன் நெய் பால் தயிர் தெங்கிளநீர் கரும்பின்
தெளிஆன் அஞ்சாடும் முடியான்”               (தி.1.ப.6பா.5)
“ஆடினாய் நறுநெய்யோடு பால் தயிர்”           (தி.3.ப.1பா.1)
“பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவர்”           (தி.3.ப.15பா.3)