3615. |
பண்டிரை பயப்புணரி
யிற்கனக |
|
மால்வரையை
நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட
முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின்
மீதணவு தென்றல்வெறியார்
வெண்டிரைகள் செம்பவள முந்துகடல்
வந்தமொழி வேதவனமே. 2
|
புகுதும் - புகும். எந்தை
பெருமான் - எனக்குத் தந்தையாகிய தலைவனின்;
இடம் என்பர். புவிமேல் - இந்தப் பூமியின்மீது. மல்பொலி - வளம் மிகுந்த.
கலிக்கடல் - ஓசையையுடைய கடல். மலைக்குவடு என - மலையின்
சிகரங்களைப்போல (வரும்) திரை அலைகள். கொழித்த - கொழிப்பதுபோல்
மடக்கிச் சொரிந்த. மணியை - இரத்தினங்களை. வில்பொலி -
வில்லைப்போன்ற. நுதல் - புருவத்தையும். கொடி (பொலி) இடை -
பூங்கொடி போன்ற இடையையும் உடைய. கணிகைமார் - உருத்திர
கணிகையர். கவரும் - வாரிக்கொள்கின்ற (வேதவனம்) புகுதும்: - து
சாரியை.
2.
பொ-ரை: முற்காலத்தில் ஒலிக்கின்ற அலைகளையுடைய
பாற்கடலில், பொன்மயமான மந்தரமலையை மத்தாக ஊன்றி, வாசுகி
என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் கடைய எழுந்த ஆலகால
விடத்தை, அமுது போன்று உண்டருளிய அழகனான சிவபெருமான்
வீற்றிருந்தருளும்இடம், நிழல்தரும் சோலைகளில் வண்டுகள்
ஆரவாரிப்பதாய், மாதவி முதலிய மரங்களின் மீது தவழும் தென்றற்
காற்றின் நறுமணமுடையதாய்க் கடலின் வெண்ணிற அலைகள்
செம்பவளங்களை உந்தித் தள்ளும், புகழுடைய திருவேதவனம் என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
பண்டு - முற்காலத்தில். இரை - ஒலிக்கின்ற. பயம் - பால்.
புணரியில் - அலைகளையுடைய பாற்கடலில். கனகமால் வரையை -
பொன்மயமான பெரிய மந்தர மலையை. நட்டு - மத்தாக ஊன்றி. அரவினை
- வாசுகி என்னும் பாம்பை. கயிறிற்கொண்டு - கயிறாகக்கொண்டு. கடைய -
தேவர்கள் கடைய. வந்த விடம் - எழுந்த ஆலகாலவிடத்தை. உண்ட -
உண்டருளிய. குழகன்றன் இடமாம் - அழகனாகிய சிவபெருமானின்
இடமாகும். வண்டு இரை - வண்டுகள் ஆரவாரிக்கின்ற. நிழல் -
நிழலையுடைய. பொழிலில் - சோலையிலே.
|