3623. |
மந்தமுர
வங்கடல் வளங்கெழுவு |
|
காழிபதி
மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன
வேவுசிவ னின்னருளினால்
சந்தமிவை தண்டமிழி னின்னிசை
யெனப்பரவு பாடலுலகில்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில்
வார்களுயர் வானுலகமே. 11 |
திருச்சிற்றம்பலம்
துவலைமேல்
- திவலைகளின்மேல், (வலையைவீசுகின்ற) வலைவாணர் -
செம் படவர்கள். காசு - இரத்தினங்களையும். மணி - முத்துக்களையும்.
வார்கனகம் - மிக்க பொன்னினையும். (வாரி விலை பேசும்) எழில் -
அழகிய (வேதவனம்).
10.
* * * * * * * * * *
11.
பொ-ரை: மந்தமான ஓசையுடைய கடல்வளமிக்க சீகாழிப்பதியில்
விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த ஞானசம்பந்தன்,
திருவேதவனத்தில் வீற்றிருந்தருளும் திருவெண்ணீறு அணிந்த சிவ
பெருமானின் இன்னருளால் அவனைப் போற்றிச் சந்தம் விளங்கும்
இன்னிசையால் அருளிய இத்திருப்பதிகத்தைப் பாடுபவர்கள் உயர்ந்த
சிவலோகத்தில் வாழ்வர்.
கு-ரை:
மந்தம் முரவம் - மந்தமான ஓசையையுடைய. கடல் வளம்
கெழுவு - கடலினால் பெறத்தகும் வளங்கள் பொருந்திய. காழிபதி - சீகாழி
யென்னும் தலத்தில். மன்னு - நிலைபெற்ற, கவுணி - கவுணிய
கோத்திரத்தினர். (கவுணிபந்தன் என இயைக்க இருபெயரொட்டுப் பண்புத்
தாகை.) (வெந்த) பொடி நீறு - பொடியாகிய நீறு (நீறணியும் சிவன் என்க).
சந்தம் இவை - சந்த இசையோடு கூடிய இப்பாடல்கள். தண்தமிழின்
இன்னிசை - குளிர்ந்த தமிழ் மொழியின் இனிய இசைப்பாடல்கள். என -
என்று. பரவு பாடல் - துதித்துப் பாடிய பாடல். உயர் வான் உலகம் -
சிவலோகத்தில். பயில்வர் - வாழ்வார்கள்.
|