பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)77. திருமாணிகுழி971

மட்டைமலி தாழையிள நீர்முதிய
     வாழையில் விழுந்தவதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுதிர
     வேறுதவி மாணிகுழியே.               10

3634. உந்திவரு தண்கெடில மோடுபுனல்
       சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியவெம் மானையடி
     சேருமணி காழிநகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும்
     ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை
     யார்கணெடு வானநிலனே.              11

 திருச்சிற்றம்பலம்


முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத, அவர்கள் சொன்ன
சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும்,
பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி
ஆகும்.

      கு-ரை: மொட்டை - மொட்டைத் தலையையுடைய. அமண் ஆதர்
- சமணர்களாகிய அறிவிலிகளும். முது தேரர் - பேதைமையின் முதிர்ந்த
புத்தர்களுமாகிய, மதி இல்லிகள் - புத்தியற்றவர்களும், முயன்றன படும் -
முயன்று செய்த வினைகளே பயன்தரும் (அதற்குக் கர்த்தா வேண்டா
என்று சொல்லும்) முட்டைகள் - உருட்டிய வழி உருளும் முட்டைபோல்
தமக்கென ஓர் உறுதி இல்லாத அவர்கள். மொழிந்த மொழி கொண்டு -
சொன்ன சொற்களால், அருள் செய்யாத - அருள் புரியாத (முதல்வன்றனிடமாம்,)
மட்டை மலி தாழை - மட்டைகளையுடைய
தென்னைகளின். இளநீர் - இளநீர்கள். முதிய வாழையில் - முதிர்ந்த
வாழையில். விழுந்த அதரில் - விழுந்த வழியே. ஒட்டமலி - வரிசையாக
உள்ள: பூகநிரை - கமுகின் சோலைகளின். தாறு உதிர - குலைகளில் உள்ள
காய்கள் உதிரும் படியாக, ஏறு - எற்றித்தாக்கும் (உதவிமாணிகுழியே.)

     11. பொ-ரை: பல பொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும்
கெடிலநதி சூழ்ந்த உதவிமாணிகுழியின் மீது, மாலைக்காலப்