பிறைச்சந்திரனைச்
சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை
இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன்
சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை
இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர்.
கு-ரை:
உந்திவரு - பல பொருள்களை அடித்துக்கொண்டு வருகின்ற.
தண் - குளிர்ச்சி பொருந்திய, கெடிலம் - கெடில நதியின். ஓடுபுனல் -
ஓடும் தண்ணீர். சூழ் - சூழ்ந்த. (உதவிமாணி குழிமேல்.) அந்திமதி சூடிய
எம்மானை - அந்திக்காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனை அணிந்த எம்
தலைவனாகிய சிவபெருமானது. அடி - திருவடிகளை, சேரும் - இடை
விடாது தியானிக்கும். அணி - அழகிய. காழிநகரான் சீகாழியில்
அவதரித்தருளியவரும். சந்தம் நிறை - சந்தம் நிறைந்த. தண் தமிழ் -
இனிய தமிழை. தெரிந்து உணரும் - அறிந்து உணர்ந்த (ஞானசம்பந்தனது.)
சொல் - சொற்களாகிய இப்பதிகத்தை. முந்தி - முற்பட. இசை செய்து -
இசையைத் தொடங்கி. மொழிவார்கள் - பாடுவோர். நெடுவான நிலன் -
எவற்றினும் உயர்ந்ததாகிய முத்தியுலகத்தை, உடையார் - உடைமையாகப்
பெறுவர்.
திருஞானசம்பந்தர்
புராணம்
செல்வம்
மல்கிய தில்லைமூ
தூரினில் திருநடம் பணிந்தேத்திப்
பல்பெ ருந்தொண்டர் எதிர்கொளப்
பரமர்தந் திருத்தினை நகர்பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன்
திருமாணி குழியினை அணைந்தேத்தி
மல்கு வார்சடை யார்திருப்
பாதிரிப் புலியூரை வந்துற்றார்.
-
சேக்கிழார்
|
|