36. திருப்பழனம் பதிக வரலாறு: சுவாமிகள், திங்களூரினின்றும் திருமறையோர்களுடன் திருப்பழனம் சேர்ந்து தங்கு பெருங்காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து, பொங்கிய அன்புற வணங்கி நின்று போற்றிசைத்த தீந்தமிழ்த் தொடைமாலைகளுள் ஒன்று இத் திருப்பதிகம். திருநேரிசை பதிக எண்: 36 திருச்சிற்றம்பலம் | 354. | ஆடினா ரொருவர் போலு | | | மலர்கமழ் குழலி னாளைக் | | | கூடினா ரொருவர் போலுங் | | | குளிர்புனல் வளைந்த திங்கள் | | | சூடினா ரொருவர் போலுந் | | | தூயநன் மறைக ணான்கும் | | | பாடினா ரொருவர் போலும் | | | பழனத்தெம் பரம னாரே. | 1 |
1. பொ-ரை: திருப்பழனத்து எம்பெருமான் திருக்கூத்தாடுபவரும், மலர் நறுமணம் வீசும் கூந்தலாளாகிய பார்வதியின் பாகரும், கங்கையும் பிறையும் சூடிய ஒப்பற்றவரும் தூயமறைகள் நான்கினையும் பாடுபவரும் ஆவார். கு-ரை: திருப்பழனத்திலே திருக்கோயில் கொணெ்டழுந்தருளிய எம்முதல்வனார் திருக்கூத்தாடியவரும், அலர்கள் மணம் வீசும் கூந்தலையுடைய மங்கையைக் கூடியவரும், தண் (கங்கை வெண்)ணீரையும் வளைந்த பிறையையும் சூடியவரும், தூயனவும் நல்லனவும் ஆகிய நான்கு வேதங்களையும் பாடியவரும் ஆன ஒருவர் போலும். தூய்மை - பொருட்குற்றம் இல்லாமை. நன்மை - சொற்குற்றம் ஓசைக்கேடு முதலிய தீமையில்லாமை. ‘வேதங்கள் நான்கும் ... பண்ணினார்’. (தி.4 ப.36 பா.1.)
|