பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)1.கோயில்259

தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.

9

1080.
நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.

10

1081.
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை

திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்ளை விட்டு ஓடும். இஃது உண்மை.
     கு-ரை: மேருவாகியவில். வட்டப்பட - அரைவட்டமாக அமைய. வாங்கி - வளைத்து. அவுணர் - திரிபுரத்தசுரர்கள். வல்லை வட்டம் மதில்; வல் - விரைவு, வட்டம் மதில் - வட்ட வடிவாயமைந்த கோட்டைகள். ஒல்லை - விரைவு. வட்டம் - தொழுவாரைச் சூழ்ந்த இடம்.
     10. பொ-ரை: திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும் வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர்; மாடமாளிகைகள் சூழ்ந்த திருத்தில்லையில் திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும்.
     கு-ரை: முதல்வனை அன்பால் அகத்தே நினைவார் அவனை உணரப் பெறுவர் என்பது கருத்து.
     11. பொ-ரை: இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன்; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்காத்து அழிக்கவல்ல சதுரப்பாடுடையவன்; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன். இப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலையை அசையும்படி, செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணனுடைய பத்து முடிகளும் வருந்தும்படி மெள்ள ஊன்றும் செம்மையான திருவடியைச் சென்று கைதொழுது உய்க.