| வெளிப்பட்ட நிலையைத் தெரிவிப்பது. | 
                      | தனித்திருக் குறுந்தொகையுள் 89ஆவது திருப்பதிகம் ஒன்று முதல் பத்து எண்கள் தொடர்ந்து             வர இறைவன் புகழை எடுத்தியம்புகிறது. சித்தத்தொகை என்னும் 97 ஆவது திருப்பதிகம்,             ஆத்திசூடிபோல, தமிழ் எழுத்தின் வரிசையமைப்பைப் பாடிய முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது. | 
                      | இனிய எளிய சொற்களால் உயர் நெறிகளை மக்கட்கு உபதேசிக்கும் இத்திருமுறையை எல்லோரும்             விரும்பிப் பயிலக் காணலாம். | 
                      |                                                               | ஐய னேஅர னேயென் றரற்றினால் உய்ய லாம்உல கத்தவர் பேணுவர்
 செய்ய பாதம் இரண்டும் நினையவே
 வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே.
 |  | 
                      | -தி.5ப.60பா.7 | 
                      |                                                               | கற்றுக் கொள்வன வாயுள நாவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள
 கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
 எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.
 |  | 
                      | -தி.5ப.91பா.6  | 
                      |                                                               | நன்று நாள்தொறும் நம்வினை போயறும் என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
 சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
 துன்று பொற்சடை யானைத் தொழுமினே.
 |  | 
                      | -தி.5ப.42பா.1 | 
                      |                                                               | ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும். ஓதி அஞ்செழுத் தும்உணர் வார்கட்குப்
 பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
 மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
 |  | 
                      | -தி.5ப.60பா.1 | 
                      |                                                               | பூவ னூர்புனி தன்திரு நாமந்தான் நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்
 பாவ மாயின பாறிப் பறையவே
 தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே.
 |  | 
                      | -தி.5ப.91பா.6  | 
                      |                                                               | உள்ளம் உள்கி உகந்து சிவனென்று மெள்ள உள்க வினைகெடும் மெய்மையே
 |  |