|                                                               | புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.
 |  | 
                      | -தி.5ப.79பா.8 | 
                      |                                                               | வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
 சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
 வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
 |  | 
                      | -தி.5ப.90பா.7 | 
                      | என்பன போன்ற பாடல்கள் பலராலும் பலகாலும்             ஓதப்பெறுபவை. | 
                      | அடங்கன்முறையிலும்,             அப்பர் தேவாரப் பதிப்புக்களிலும் காணப் பெறாததும், நூலாசிரியர் உரையாசிரியர்களால்             மேற்கோளாகக் கூறப்பெறுவதுமாகிய திருக்குறுந்தொகைப் பாடல் ஒன்று ஆய்வறிஞர்களால்             கண்டு உணர்த்தப் பெற்றுள்ளது. | 
                      | தாயுமானவர், | 
                      |                                                               | "உன்னில்உன்னும் என்ற உறுமொழியால் என்இதயந் தன்னில்உன்னிநன் னெறியைச் சாரும்நாள் எந்நாளோ"
 |  | 
                      | எனக் கூறியுள்ளதையும், அருணந்தி சிவம் இருபா             இருபதில் | 
                      |                                                               | "கோதில் அமுதக் குணப்பெருங் குன்ற என்னில் ஆர்தலும் அகறலும் என்னைகொல்
 உன்னில் உன்னி உனாவிடில் பெயர்குவம்
 என்னும் அதுவே நின்னியல் பெனினே"
 |  | 
                      | என்று             கூறியதையும் நோக்க, பின்வரும் பாடல் திருக்குறுந்தொகையில் இடம் பெற்றிருந்ததை             உணரலாம். | 
                      | இருபா             இருபதில் மேற்கூறிய பாடல் வரிகளுக்கு அரிய உரை எழுதிய திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத்             நமச்சிவாயத் தம்பிரான் சுவாமிகள் தாம் கூறிய உரைக்குப் பிரமாணமாக, | 
                      |                                                               | பன்னி லூறும் பழத்தினும் இன்சுவை என்னி லூறி எனக்கே களிதரும்
 உன்னி லுன்னுமுன் னாவிடில் விட்டிடும்
 என்னில் ஈசன் இருந்த இயற்கையே.
 |  | 
                      | என்ற 'தேவார'த்தில் கண்டுகொள்க என்று எழுதியுள்ளார்கள். |