பக்கம் எண் :

826திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

2080.
கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.
5
2081.
பேய்வ னத்தமர் வானைப் பிரார்த்தித்தார்க்
கீவ னையிமை யோர்முடி தன்னடிச்
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடல்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.
6
2082.
எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்

யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்" என்னும் சித்தியார் வாக்கோடு ஒப்பிட்டுணர்க.
     5. பொ-ரை: கிணற்றாமை கடலாமையை நோக்கி இக்கிணற்றோடொக்குமோ கடல்? என்று கூறுதலைப்போன்று தேவதேவனாகிய சிவபெருமானின் பெருந்தன்மையைப் பாவிகளாகிய மக்கள் பார்த்தற்கு அரிது என்பர்.
     கு-ரை: கூவல் - கிணறு. குரை - ஒலிக்கின்ற. பாவகாரிகள் - பாவச்செயல் செய்பவர்கள். பார்ப்பரிது - இறைவனது தன்மையைக் காணுதல் முடியாது.
     6. பொ-ரை: பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் அமர்வானும், வேண்டியிருந்தவர்களுக்கு அருள்வழங்குவானும், தேவர்கள் முடிகள் திருவடிகளில் சாய்க்கப்பெறுவானும், தமக்குடலினுள் சீவனுமாய்ச் சிவனுமாய் இருப்பவனை வஞ்சனை உடையவர்கள் சிந்தியார்கள்.
     கு-ரை: பேய்வனம் - இடுகாடு. ஈ வன் - ஈ பவன் என்பதன் இடைக்குறை. அடிச்சாய்வன் - அடியில் சாயப்பெற்றவன். சலவார்கள் - வஞ்சனையுடையவர்கள். உடல் சீவன் - உடலைச் சீவன் உண்ணின்றியக்குதல் போல அவர்களுக்குள் நின்று ஆட்கொள்ளுபவன்.
     7. பொ-ரை: வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள்; அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளைக் காண்டற்கு அயர்த்து நரிவிருத்தம் ஆகுவர்.