1018. | ஆனை உரித்தபகை அடி | | யேனொடு மீளக்கொலோ | | ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி | | யானை நினைந்திருந்தேன் | | வானை மதித்தமரர் வலஞ் | | செய்தெனை யேறவைக்க | | ஆனை அருள்புரிந்தான் நொடித் | | தான்மலை உத்தமனே. | | 2 |
1019. | மந்திரம் ஒன்றறியேன் மனை | | வாழ்க்கை மகிழ்ந்தடியேன் | | சுந்தர வேடங்களால் துரி | | சேசெயுந் தொண்டன்எனை |
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் | ஈறி லாதவன் ஈச னொருவனே. | (தி. 5 ப. 100 பா. 3) |
என்றருளிச் செய்தவாறு, எண்ணில்லாத தேவர் யாவரையும் ஈறுசெய்து, தான் ஈறின்றியே நிற்கும் முதன்மையினை விளக்குதற் பொருட்டு. இதனானே, என்றும் அவ்வாறு நிற்றல் இனிது பெறப்படும். 2. பொ-ரை: யான், கருவி கரணங்களை அறிவினால் அடக்கி, அறிவே வடிவாய் உள்ள தன்னை உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன்; அவ்வளவிற்கே, திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் அம் முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம்செய்து ஏற்றிச் செல்லுமாறு, ஓர் யானையூர்தியை எனக்கு அளித்தருளினான்; அஃது, அவன் முன்பு யானையை உரித்ததனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள்பண்ணக் கருதியதனாலோ; அன்றி என்மாட்டு வைத்த பேரருளாலோ! கு-ரை: ஓடு, ஆன் உருபின் பொருளில் வந்தது. "கொல்" ஐயமாகலின், அதற்குரியது வருவித்துரைக்கப்பட்டது. ஓகாரம், அசை நிலை. 'மதித்த' என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. 3. பொ-ரை: நெஞ்சே, அடியேன், மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது,
|