| "பித்தரை யொத்தொரு பெற்றியர் நற்றவை | யென்னைப்பெற்ற | | முற்றவை தம்மனை தந்தைக்கும் தவ்வைக்கும் | தம்பிரானார்" |
(தி. 7 ப. 18 பா. 7) "ஆவணம் செய்து ஆளுங் கொண்டு" (தி. 7 ப. 5 பா. 10) தவநெறி வேண்டுதல் : திருத்துறையூரில் சுந்தரா தவநெறி வேண்டிப் பதிகம் பாடினார். அத் திருப்பதிகத்திலேயே தவநெறி வேண்டும் குறிப்பைத் தெரிவித்துள்ளார். "துறையூர்த் தலைவா உனைவேண்டிக்கொள்வேன் தவநெறியே" (தி. 7 ப. 13 பா. 1 - 10) திருவடி சூட்டப் பெறுதல் : திருவதிகைச் சித்தவட மடத்தில் பெருமான் திருவடி சூட்டியருளிய நிலையில் பாடிய திருப்பதிகத்தில் சுந்தரர், பெருமான் திருவடி சூட்டிய அற்புதத்தைக் கூறியுள்ளார். | "எம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும் | ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் | | எம்மானை யெறிகெடில வடவீரட் டானத்து | உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே" | (தி. 7 ப. 38 பா. 1) |
காழிக் கடவுள் காட்சி : சுந்தரர், சீகாழிப் பதியைத் திருவடிகளால் மிதித்தற்கஞ்சிப் புற எல்லையை வலஞ்செய்து வணங்கி நின்றாராக, காழிப் பெருமான் காட்சி வழங்கினார். அவ்வருட்காட்சியைக் கண்ட அற்புதத்தைப் பாடல் தோறும், "கழுமல வளநகர்க் கண்டு கொண்டேன்" (தி. 7 ப. 58 பா. 1 - 10)
|