பக்கம் எண் :

409
 

இடக்கண் பெற்றது :

காஞ்சிபுரத்திறைவரை வழிபட்டுச் சுந்தரர் இடக்கண் பெற்றதை அறிவிக்கும் பகுதிகள்:

"ஏலவார் குழலாள் உமைநங்கை

என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானைக்

காணக் கண்ணடியேன் பெற்றவாறே"

(தி. 7 ப. 61 பா. 1)

"கற்றவர் பரவப்படுவானைக் காணக் கண்ணடியேன்
பெற்றதென்று"(தி. 7 ப. 61 பா. 11)

உடற்பிணி நீங்கப் பெற்றது :

திருத்துருத்தி இறைவரைப் பணிந்து திருக்குளத்தில் நீராடி உடற்பிணி,நீங்கப் பெற்றதை அறிவிக்கும் பகுதிகள்:

"கண்ணிலேன் உடம்படு நோயால்
கருத்தழிந்து உனக்கே பொறையானேன்"

(தி. 7 ப. 10 பா. 2)

"என்னுடம்படும் பிணியிடர் கெடுத்தானை"

(தி. 7 ப. 74 பா. 1)

"உற்றநோய் இற்றையே அறவொழித்தானை"

(தி. 7 ப. 74 பா. 5)

"தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர் வறுத்தானை"

(தி. 7 ப. 74 பா. 3)

வலக்கண் பெற்றது :

சுந்தரர் திருவாரூரை யடைந்து இறைவனைப் பணிந்து வலக்கண் பெற்றார். இக்குறிப்பைத் தெரிவிக்கும் பகுதிகள் :


விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பியாட்பட்டேன்
குற்றமொன்றும் செய்ததில்லை கொத்தை யாக்கினீர்