எற்றுக்கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக்கண் தான்தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. (தி. 7 ப. 95 பா. 2) "பாரூர் அறியஎன்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்" (தி. 7 ப. 95 பா. 2) "காணாத கண்கள் காட்டவல்ல கறைக்கண்டனே" (தி. 7 ப. 92 பா. 8) ஏயர்கோன் பிணி நீக்கியது : ஏயர்கோன் கலிக்காமரை அடைந்து சுந்தரர் இறையருளால்நட்புக்கொண்டனர். அதனைக் குறிக்கும் பகுதி : "ஏதநன்னிலம் ஈரறுவேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து" (தி. 7 ப. 55 பா. 3) மூவேந்தருடன் வழிபட்டது : சுந்தரர், சேரமான் பெருமாளோடு மதுரை சென்று பாண்டியன், சோழன் ஆகிய மன்னர்களோடு பல தலங்களையும் வழிபட்டனர். இதனைக் குறிக்கும் பாடல். அடிகேளுமக் காட்செய அஞ்சுது மென்று | அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி | முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே | மொழிந்தாறு மோர்நான்கு மோர் ஒன்றினையும் | படியா இவை கற்றுவல்ல அடியார | பரங்குன்றம் மேய பரமனடிக்கே | குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக் | குலவேந்த ராய் விண்முழு தாள்பவரே. |
(தி. 7 ப. 2 பா. 11)
|