ஐயாற்றிறைவரை வழிபட்டது : காவிரியில் கரைபுரண்டோடிய வெள்ளத்தை விலக்கி ஐயாற் றிறைவனைச் சென்று வழிபட்டார் சுந்தரர். இதனைக் குறிக்கும் பகுதி. "விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம்பரந்து நுரைசிதறி அதிர்க்கும் திரைக்காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகேளோ" (தி. 7 ப. 77 பா. 9) வழிப்பறிசெய்த பொருள்களை மீட்டது : சுந்தரர் திருமுருகன்பூண்டி வழியாக வரும்போது வேடர்களால் பறிக்கப்பெற்ற பொருள்களை இறைவனை வேண்டிப் பெற்றார். இதனைக் குறிக்கும் பகுதிகள். கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர | விரவ லாமைசொல்லித் | திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு | ஆற லைக்குமிடம் | முடுகு நாறிய வடுகர் வாழ்முரு | கன்பூண்டி மாநகர்வாய் | இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் | எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | (தி. 7 ப. 49 பா. 1) |
"எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் கொங்கே புகினும் கூறைகொண்டு ஆறலைப்பாரிலை"
(தி. 7 ப. 92 பா. 3) முதலையுண்ட பாலனை மீட்டது : அவினாசியில் முதலையுண்ட பாலனைச் சுந்தரர் இறைவன் அருட்டுணைகொண்டு மீட்டருளினார். இதனைக் குறிக்கும் பகுதிகள். உரைப்பார் உரையுகந் துள்கவல்லார் தங்க ளுச்சியாய் அரைக்காடரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவினாசியே கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே.
(தி. 7 ப. 92 பா. 4)
|