பக்கம் எண் :

412
 

வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவதழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளியூ ரிற்குளத்திடை
இழியாக் குளித்த மாணி யென்னைக்கிறி செய்ததே.

(தி. 7 ப. 92 பா. 2)

"புள்ளேறு சோலைப் புக்கொளியூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்னைக்கிறி செய்ததே"

(தி. 7 ப. 92 பா. 9)

கயிலைக்கு எழுந்தருளியது:

திருவஞ்சைக் களத்திறைவனிடம் சுந்தரர், உலக வாழ்வில் வெறுப்புற்றதை எடுத்துக்கூறி ஆட்கொண்டருள வேண்டினார். சிவபெருமான் தேவர்களை அனுப்பிச் சுந்தரரைத் திருக்கயிலைக்கு அழைத்துவரச் செய்தான். சுந்தரர் வெள்ளையானைமீது திருக்கயிலைக்குச் சென்றருளினார்.இதனைக் குறிக்கும் பகுதிகள்:

"வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்"

(தி. 7 ப. 4 பா. 8)

"வானை மதித்தமரர் வலஞ்செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்தான் மலைஉத்தமனே"

(தி. 7 ப. 100 பா. 2)

"விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளையானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே"


(தி. 7 ப. 100 பா. 5)

"வானெனை வந்தெதிர்கொள்ள மத்தயானை அருள் புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே"

(தி. 7 ப. 100 பா. 1)

"துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன் பரமல்லதொரு
வெஞ்சின ஆனைதந்தான் நொடித்தான்மலை உத்தமனே"

(தி. 7 ப. 100 பா. 6)