பக்கம் எண் :

413
 

"நிலைகெட விண்ணதிர நிலமெங்கு மதிர்ந்தசைய
மலையிடை யானையேறி வழியே வருவே னெதிரே
அலைகட லாலரையன் அலர்கொண்டு முன்வந்திறைஞ்ச"

(தி. 7 ப. 100 பா. 7)

"வரமலிவாணன் வந்து வழிதந்தெனக் கேறுவதோர் சிரமலியானை தந்தான்"

(தி. 7 ப. 100 பா. 8)

இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன்என்றான் நொடித்தான்மலை யுத்தமனே.

(தி. 7 ப. 100 பா. 9)

வருணன் திருப்பதிகத்தை வெளிப்படுத்தியது:

சுந்தரர் பாடிய நொடித்தான்மலைத் திருப்பதிகத்தை வருணனிடம் கொடுத்தருள அவன் அத்திருப்பதிகத்தைத் திருவஞ்சைக்களத்தில் கொண்டு வந்து சேர்ப்பித்தனன். இதற்குரிய அகச்சான்று,

 

ஊழிதோறூழி முற்றும் உயர்பொன் நொடித்தான்மலையைச்
சூழிசையின் கரும்பின்சுவை நாவலவூரன் சொன்ன
ஏழிசையின் றமிழால் இசைந்தேத்திய பத்தினையும்
ஆழிகடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே.

(தி. 7 ப. 100 பா. 10)

சேரர்கோன் திருக்கயிலை சென்றது:

சேரமான் பெருமாள் சுந்தரருடன் கயிலை சென்றனர் என்ற வரலாறு, நம்பியாண்டார் நம்பிகள் வாய்மொழிகளால் விளங்குகிறது. திருவிசைப்பாப் பாடற் பகுதியும் இதனை வலியுறுத்தும்.
             

"சேரற்குத் தென்னா வலர்பெருமாற்குச் சிவனளித்த
வீரக் கடகரிமுன்புதம் பந்தி யிவுளி வைத்த வீரற்கு.."

- தி. 11 திருத்தொண்டர் திருவந்தாதி, 86