பக்கம் எண் :

617
 
230.எங்கே னும்மிருந்துன் னடி

யேன்உ னைநினைந்தால்

அங்கே வந்தென்னொடும் முட

னாகி நின்றருளி

இங்கே என்வினையை யறுத்

திட்டெ னையாளுங்

கங்கா நாயகனே கழிப்

பாலை மேயானே.

2


231.

ஒறுத்தாய் நின்னருளில் லடி

யேன்பி ழைத்தனகள்

பொறுத்தாய் எத்தனையுந் நா

யேனைப் பொருட்படுத்துச்

செறுத்தாய் வேலைவிடம் மறி

யாமல் உண்டுகண்டங்

கறுத்தாய் தண்கழனிக் கழிப்

பாலை மேயானே.

3



2. பொ-ரை: திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக் கின்றவனே, நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால், அங்கே வந்து என்னோடு கூடி நின்று, என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன்.

கு-ரை: "கங்கா நாயகன்" என்றது, 'எங்கள் சிவபெருமான்' என்னும் அளவாய் நின்றது. அதன்பின், 'நீ' என்னும் எழுவாய் தொகுத்தலாயிற்று.

3. பொ-ரை: குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய்; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும், நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய்; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு