270. | மறையோர் வானவருந் தொழு | | தேத்தி வணங்கநின்ற | | இறைவா எம்பெருமான் எனக் | | கின்னமு தாயவனே | | கறையார் சோலைகள்சூழ் திருக் | | கற்குடி மன்னிநின்ற | | அறவா அங்கணனே அடி | | யேனையும் அஞ்சலென்னே. | | 2 |
271. | சிலையால் முப்புரங்கள் பொடி | | யாகச் சிதைத்தவனே | | மலைமேல் மாமருந்தே மட | | மாதிடங் கொண்டவனே |
என்பது ஈற்று ஐகாரம் கெட்டு நின்றது. 'அஞ்சல்' எனல் தேற்றற் பொருளதாகலின், புகழ்தல் முதலியனபோல இரண்டாவதற்கு முடிபாகும் என்க. சுவாமிகள், இங்ஙனம் வேண்டினமையாற் போலும், இத்தலம், 'உய்யக்கொண்டான்' என வழங்குகின்றது. 2. பொ-ரை: அந்தணரும், அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே, எம்பெருமானே. எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே, இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, அழகிய கண்களையுடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக்கொண்டருள். கு-ரை: "மறையோர் வானவர்" என்பது, உயர்திணைப் பன்மைப் பெயர்க்கண் வந்த உம்மைத்தொகையாதலின் ஒருசொல்லாய் நிற்க, அஃது இறுதிக்கண் சிறப்பும்மை ஏற்றது. அன்றி எண்ணும்மையாக்கி, அது, 'மறையோர்' என்புழித் தொகுத்தலாயிற்று எனலுமாம். கண்ணுக்கு அழகாவது, மிக்க கருணை. 3. பொ-ரை: வில்லால், திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே, மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே, இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே, மான் பொருந்திய கையை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே,
|