452. | தாருந்தண் கொன்றையுங் கூவி | | ளந்தனி மத்தமும் | | ஆரும் அளவறி யாத | | ஆதியும் அந்தமும் | | ஊரும்ஒன் றில்லை உலகெ | | லாம்உகப் பார்தொழப் | | பேரும்ஓ ராயிர மென்ப | | ரால்எம் பிரானுக்கே. | | 7 |
453. | அரியொடு பூமிசை யானும் | | ஆதியும் அறிகிலார் | | வரிதரு பாம்பொடு வன்னி | | திங்களும் மத்தமும் | | புரிதரு புன்சடை வைத்த | | எம்புனி தற்கினி | | எரியன்றி அங்கைக்கொன் றில்லை | | யோஎம் பிரானுக்கே. | | 8 |
கு-ரை: ''மறை'' என்றது, 'ஒருவருக்கும் விளங்காதன' என்னும் பொருளதாய், சிறப்பின்மை தோற்றுவித்தது. 7. பொ-ரை: எம் பெருமானுக்கு, மாலையும், 'தண்ணிய கொன்றைப் பூ, கூவிளையிலை, மிகத் தாழ்ந்த ஊமத்தம்பூ' என்பன. அளவும் யாராலும் அறியப்படாத முதலும், முடிவும்; உலகம் முழுதுமாம். சொல்வதற்குப் பேரும் ஒன்றல்ல; ஓர் ஆயிரம் என்று சொல்லி யாவரும் நகைப்பர்; அவன் இவ்வாறிருத்தல் என்னோ! கு-ரை: ஆதியும், அந்தமும் அறியப்படாமை முதலியன அவன் அணுகலாகாது நிற்றலைக் குறிப்பனவாய், நகுதற்கு ஏதுவாயின. 8. பொ-ரை: கீற்றுக்களையுடைய பாம்போடு, 'வன்னி, ஊமத்தை, பிறை' என்பவைகளை, புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை, திருமாலும், பூமேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறியமாட்டார்; பிறர் ஆர்
|