| ஆயின சீர்ப்பகை ஞானியப் | | பனடித் தொண்டன்றான் | | ஏசின பேசுமின் தொண்டர் | | காள்எம் பிரானையே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
பெருமானை, அவன் அடித்தொண்டனும், மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும், ஏசிப் பாடியனவும் ஆகிய இப்பத்துப் பாடல்களால், எம் பெருமானைப் பாடுமின். கு-ரை: 'பயன் பெறுவீர்' என்பது குறிப்பெச்சம். ''காய் சினம்'' என்றது இன அடை. ஞானி - ஞானமுறையினன். 'ஞானவப்பன்' எனப் பாடம் ஓதுதலுமாம். ''ஞானத்தந்தை'' என்றது, வனப் பகையைத் தம் மகளாகவும், தம்மை அவள் தந்தையாகவும் கருதிநிற்றல்பற்றி. சேரமான் பெருமாள் நாயனார் புராணம் | | இறைவர் கோயில் மணிமுன்றில் | வலம்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு | நிறையும் காத லுடன் வீழ்ந்து | பணிந்து நேர்நின் றாரூரர் | முறையில் விளம்பும் திருப்பதிகம் | முடிப்பது கங்கை யென்றெடுத்துப் | பிறைகொள் முடியார் தமைப்பாடிப் | பரவிப் பெருமா ளுடன் தொழுதார். | 146 | | -தி. 12 சேக்கிழார் |
|