45. திருவாமாத்தூர் பதிக வரலாறு: நம்பியாரூரர், சங்கிலியாரைப் பிரிந்து திருவொற்றியூரைவிட்டு நீங்கியதால் இழந்த கண்களில் இடக்கண்ணைக் காஞ்சியில் பெற்று, பல தலங்களையும் வணங்கிக் கொண்டு திருவாரூருக்குப் போகும் வழயில் திருஆமாத்தூர் இறைவரைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 293) குறிப்பு: இத்திருப்பதிகம், சுவாமிகள், இறைவர்பால் தமக்குள்ள அன்பின் மிகுதியைப் புலப்படுத்து அருளிச்செய்தது. பண்: கொல்லிக்கௌவாணம் பதிக எண்: 45 திருச்சிற்றம்பலம் 456. | காண்டனன் காண்டனன் காரிகை | | யாள்தன் கருத்தனாய் | | ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் | | தூர்எம் மடிகட்காட் | | பூண்டனன் பூண்டனன் பொய்யன்று | | சொல்லுவன் கேண்மின்கள் | | மீண்டனன் மீண்டனன் வேதவித் | | தல்லா தவர்கட்கே. | | 1 |
1. பொ-ரை: அடியேன், திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனை, உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன்; அவனுக்கு அடிமை பூண்டேன்; அடிமையைப் பலகாலும் செய்தேன்; இவை பொய்யல்ல; இன்னும் சொல்லுவேன்; கேண்மின்; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன். கு-ரை: 'கண்டனன்' என்பது, நீட்டலாயிற்று. கருத்தன் - தலைவன். ஆளுதல் - பயன் படுத்துதல். வித்து - அறிந்தோர்; அது, வேதப்பொருளை மேலானதாக உணர்ந்து போற்றுவோரைக் குறித்தது. 'அல்லாதவர்கட்கு' என்பது, உருபு மயக்கம். இவை, அடியவர் முன்னர்க் கூறியனவாகும். இத்திருப்பாடலிலும் வருகின்ற திருப்
|