457. | பாடுவன் பாடுவன் பார்ப்பதி | | தன்னடி பற்றிநான் | | தேடுவன் தேடுவன் திண்ணனப் | | பற்றிச் செறிதர | | ஆடுவன் ஆடுவன் ஆமாத் | | தூர்எம் மடிகளைக் | | கூடுவன் கூடுவன் குற்றம | | தற்றென் குறிப்பொடே. | | 2 |
458. | காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ | | லாலன்று காமனைப் | | பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி | | னாலன்று கூற்றத்தை | | ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் | | தூர்எம் மடிகளார் | | ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி | | ராட்டியைப் பாகமே. | | 3 |
பாடல்களிலும், வலியுறுத்தற் பொருட்டுப் பலவற்றையும் அடுக்கிக் கூறி யருளினார் என்க. 2. பொ-ரை: யான், இவ்வுலகிற்குத் தலைவனாகிய, திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை, அவனது திருவடியைக் கருதிப் பாடுவேன்; உறுதியாகப் பற்றி அணைத்தற்குத் தேடுவேன்; தேடிக்கண்டு, என் கருத்தின் வண்ணம் குற்றம் நீங்கிக் கூடுவேன்; கூடிய களிப்பினால் ஆடுவேன். கு-ரை: ''பார்ப் பதி'' என்றதை, 'பாருக்குப் பதி' என்க. 'பார்வதி' என்றுரைத்தற்கு ஏலாமை யறிக. இறுதிக்கண் வைக்கற் பாலதாய, 'ஆடுவன்' என்பதை, செய்யுள் நோக்கி இடைவைத்தார். 3. பொ-ரை: திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன், அன்று காமனைத் தனது நெற்றிக்கண்ணில் உள்ள நெருப்பால் எரித்தவன்; அன்று, கூற்றுவன்மேற் காலாற் பாய்ந்து அவனை அழித்தவன்; எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன்; எம்பெருமாட்டியை ஒருபாகத்தில் ஆரப்பொருந்தியவன். கு-ரை: ஆய்ந்தவன், 'நுணுகியவன்' எனலுமாம். 'ஆர'
|