பக்கம் எண் :

திருமுறை]25. கோயில்167


252.

நினைத்தேன் இனிப்போக்குவனோ நிம
   லத்திரளை நினைப்பார்
மனத்தினு ளேயிருந்த மணி
   யைமணி மாணிக்கத்தைக்
கனைத்திழி யுங்கழனிக் கன
   கங்கதிர் ஒண்பவளம்
சினத்தொடு வந்தெறியுந் தில்லை
   மாநகர்க் கூத்தனையே.                        (6)
 

253.

கூத்தனை வானவர்தங் கொழுந்
   தைக்கொழுந் தாய்எழுந்த
மூத்தனை மூவுருவின் முத
   லைமுத லாகிநின்ற
ஆத்தனைத் தான்படுக்கும் அந்
   தணர்தில்லை யம்பலத்துள்
ஏத்தநின் றாடுகின்ற எம்
   பிரான்அடி சேர்வன்கொலோ!                  (7)
 


252.       ‘‘நிமலத்திரளை’’ என்பது முதலாகத் தொடங்கிப் பூட்டு
வில்லாக  முடிக்க.   நிமலத் திரள்-தூய்மையின் மிகுதி. ‘‘மனத்தினுளே
இருந்த மணி’’ என்றது அற்புத உருவகம். பின்னர் வந்த மணி, அழகு.
‘‘மணியை’’   எனவும்,   ‘‘மாணிக்கத்தை’’  எனவும்  வேறு  வேறாகக்
கூறினாராயினும்,    ‘மாணிக்க   மணியை’   என்பதே   கருத்தென்க.
கனைத்து-ஒலித்து.  கனகம்-மிக்க   நீர்.  ‘‘கழனி’’ என்பதன்றி, ‘கனநீர்’
என்பதே பாடம் போலும்! கனம்-மேகம்.‘‘சினத்தொடு வந்து’’ என்றது,
தற்குறிப்பேற்றம்.

253.    வானவர்தம் கொழுந்து-தேவ கூட்டத்திற்குத் தலையாயவன்.
பின்னர்,  ‘‘கொழுந்தாய்’’ என்றது, ‘எல்லாப் பொருட்கும் கொழுந்தாய்’’
என்றவாறு.  எழுந்த  -  தோன்றிய;  என்றது,  படைப்புக்  காலத்தில்
முதற்கண்  உருவும்,  பெயரும்,  தொழிலும்  கொண்டு  நின்றமையை,
‘‘முளைத்தானை    எல்லார்க்கும்  முன்னே தோன்றி’’   என்றார்
நாவுக்கரசர்   (திருமுறை-6.19.9).   ‘மூத்தவனை’   என்பதில்  அகரம்
தொகுத்தலாயிற்று.  மூத்தவன்-முன்னோன்.  நிலையை, ‘உரு’ என்றார்.
முந்நிலையாவன.  ‘படைக்கும் நிலை, காக்கும் நிலை, அழிக்கும் நிலை’
என்பன. பின்னர்,  ‘‘முதலாகி நின்ற’’ என்றது, ‘எல்லாச் செயல்கட்கும்