பக்கம் எண் :

1திருமுகப் பாசுரம்


சிவமயம்

பதினொன்றாந் திருமுறை

திருவாலவாயுடையார்
அருளிச் செய்த

1, திருமுகப் பாசுரம்

நேரிசை யாசிரியப்பா
திருச்சிற்றம்பலம்

1.மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற(கு)
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
5.

பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு)

ஒருமையின் உரிமையின் உதவி. ஒளிதிகழ்,
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க;
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்

10

தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்;
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

திருச்சிற்றம்பலம்


1. இத்திருப்பாடல் தோன்றிய வரலாற்றைச் சேரமான் பெருமாள் நாயனார் புராணத்துட் காண்க.

அருஞ்சொற் பொருள்: ஓலையைத் ‘திருமுகம்’ என்றல் அதனை விடுத்தோரது உயர்வு பற்றி. பாசுரம் - மிகுத்துரை பாட்டு. மதி - சந்திரன். மலிதல் - மகிழ்தல். முதனிலைத் தொழிற்பெயர். இது மகிழ்ந்து தவழ்தலாகிய தன் காரணம் தோற்றி நின்றது. இனி ‘மலிமதி’ என மொழிமாற்றி, ‘நிறைந்த திங்கள்’ என உரைப்பினும் ஆம்.