பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை512

694.மதியாருஞ் செஞ்சடையான், வண்கொன்றைத் தாரான்
மதியாரும் மாலுடைய பாகன் - மதியாரும்
அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூட்டாகி
அண்ணா மலைசேர்வ ரால்.

38

695.ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெயல் ஆடுவதீ, - ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான், சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.

39

696.சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்
சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் - சொல்லாய
வீரட்டத் தானை, விரவார் புரம்அட்ட
வீரட்டத் தானை விரை.

40


தருவான்) என இயைத்து முடிக்க. ஈற்றில் எஞ்சி நின்றது அவாய் நிலை. சிவபெருமான் முன்னே முனிந்தானாயினும் பின்னே திருவுளம் இரங்குபவன் என்பது அவன் இராவணனை முன்னே தோள்நெரித்துப் பின்னே அருளிய வாற்றால் விளங்கும்’ என்றபடி.

694. குறிப்புரை: “மதி” மூன்றில் முதலது பிறை; இறுதியது நிறைநிலா. இடையது அறிவு. மால் சிவபிரானைப் பலமுறை வழிபட்டமை பற்றி அறிவு நிறைந்தவனாகக் கூறினார். அண்ணாமலை - திருஅண்ணாமலை. ஆரோடும் . மனைவி, மக்கள் முதலிய சுற்றத்தாரும், மற்றும் நண்பரும் ஆகிய யாரோடும். கூட்டு ஆகி. கூடி வாழும் வாழ்க்கையராகி. அண்ணாமல் - நெருங்காமல்; ‘வாழ்விழந்த’ என்றபடி. ஐசேர்வார் - மிடற்றில் கோழைவந்து சேரப் பெறுவார். ஆல், அசை.

695. குறிப்புரை: “ஆலந்துறை யுடையான் என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. ஆலந்துறை, அன்பில் ஆலந்துறை. பாடல் பெறாது வேறு உளவேனும் கொள்க. ‘அவனது சொல் சோராதன; பயனளியாது போகாதன. அவன் இருப்பது ஆல நிழற்கீழ்; ஆய்வது அறம்; அமுது செய்வது ஆலம், (நஞ்சு) ஆடுவது தீ’ என்க. ‘ஆடுவது’ என்பது ஈறு குறைந்து நின்றது, சிவபெருமானது இயல்புகளை விதந்தவாறு. “இருப்பதுவும்” என்றாற்போல ஏனையவற்றிலும் இழிவு சிறப்புண்மை - உயர்ந்தவற்றைத் தாழ்ந்தனபோலக் கூறிப் புகழ்ந்தவாறு.

696. குறிப்புரை: சொல் ஆயம் - சொற்கூட்டம்; பலவகை மொழிகள். ‘அவை இன்றி’ என்றது, ‘அவைகளைக் கடந்து’ என்றபடி.