பக்கம் எண் :

583கோயில் நான்மணிமாலை

அகவற்பா

825.

அறிவில் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி, வினையெனும்
தொல்மீ காமன் உய்ப்ப,அந்நிலைக்

5

கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்

புலனெனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந்(து)அலைக்கும்
துயர்த்திரை உவட்டின் பெயர்ப்பிடம்அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல்வீழ்த்து

10

நிறையெனும்கூம்பு முரிந்து, குறையா

உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம்,அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ்சடிலத்துப்

15

பையரவணிந்த தெய்வ நாயக!

தொல்லெயில் உடுத்த தில்லை காவல!
வம்பலர் தும்பை அம்பல வாண!நின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.

16


சிலர், தில்லைக் கூத்தப் பெருமான் தொடர்பாக ஒன்றையேனும் சொல்கின்றிலர். மறி - மான்கன்று. தான்- தரித்தவன். புயன் - தோள்களையுடையவன். அவர் நரகிற்கு ஏதுவான செயல்களையே செய்து போவர் ஆதலின், ‘நரகுஉறுதலைத் தவிரமாட்டார்’ எனவும். ‘அதற்குக் காரணம்அறிவின்மையே’ எனவும் கூறினார்.

825.குறிப்புரை: “அலங்கல்மதியுடன்.... அம்பலவாண” என்னும் தொடரை முதற்கண்வைத்து உரைக்க. இடும்பை - துன்பம். இணையன - இவைபோல்வன. எனவே, இங்குக் குறிக்கப்படுகின்ற மரக்கல வாணிபம் நஞ்சும். கள்ளும், கொலைக் கருவிகளும்போன்ற தீப்பொருள்வாணிப மாகின்றதேயன்றி, நற்பொருள் வாணிபமாகவில்லை. மீகாமன் - மாலுமி. உய்ப்ப - செலுத்த - கரு - உடம்பு தோன்றுதற்கு முதலாய் உள்ள வித்தும், நிலமும். அவைதாம் பலவாகலின்,பல துறைமுகப்பட்டினங்களாக உருவகம் செய்யப்பட்டன- ‘அந்தத்’ துறைகள் பலவற்றில் ஒருதுறைப் பிறப்பாகியகடலில் புகுந்து’ என்க. நீத்தம் - நீர். புலன் - ஐம்புல