| 77. | யாழை முரித்தும், இருங்கதவம் தான் அடைத்தும், | | சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும், - தாழ்பொழில்சூழ் |
| 78. | கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும், | | துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில் |
| 79. | நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில் | | முத்தின் சிவிகை முதல் கொண்டும், - அத்தகுசீர் |
| 80. | மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்(கு) | | ஆயிரஞ் செம்பொ னதுகொண்டும், - ஆய்வரிய |
| 81. | மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில் | | ஆண்பனை பெண்பனைக ளாக்கியும், - பாண்பரிசில் |
| 82. | கைப்பணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற் | | சப்பாணி கொண்டும் தராதலத்துள் - எப்பொழுதும் |
| 83. | நீக்கரிய இன்பத்(து) இராகமிருக் குக்குறள், | | நோக்கரிய பாசுரம், பல் பத்தோடு, - மாக்கரிய |
| 84. | யாழ்மூரி, சக்கரமாற்(று) ஈரடி, முக்காலும் | | பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி |
வான் பொருள் - முடிநிலைப் பொருள். அது சிவஞானம் உடையவரை, உயர்வு தோன்ற. “சிவஞானம்” என்றே பாற்படுத்துக் கூறினார். “ஞானத்தின் திருஉருவை” எனச் சேக்கிழாருங் கூறினார்.1 65 - சீர்த் தத்துவம் - சிறந்த உம்மை. தத்துவன் - உண்மையை உபதேசித்தருள்பவன். நித்தன் - நிலையுடைய புகழ் உடம்பைப் பெற்றவன். தவர் - தவம் செய்வோர். வித்தகம் - சதுரப்பாடு; திறமை. இது சமண சமயத்தவரோடு வாதம் புரிகையில் இனிது விளங்கிற்று. விடலை - இளங் காளை; பதினாறு வயதிற்கு உட்பட்டவன். தெவ்வர் - பகைமை கொண்ட சமணர். அடல் - வலிமை. உரும் - இடி. தெவ்வரை, ‘பாம்பு’ என்னாமையால், இஃது ஏகதேச உருவகம். “சிங்கம், குஞ்சரம்” - என்பன காதற் சொற்கள்.2 68 - காலம், பொதுவாக ‘ஒன்று’ எனச் சொல்லப்பட்டாலும் நொடி, நாழிகை முதலாகவும், இறப்பு, நிகழ்வு, எதிர்வாகவும் பல ஆதலின் “காலத் தொகுதி” - என்றார். இதனால் முக்காலத்தையும்
1.பெரிய புராணம் -திருஞானசம்பந்தர் - 728. 2. தொல் - சொல் - 56.
|