பக்கம் எண் :

959ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1347.சரத மணமலி பரிசம் வருவன;

தளர்வில் புகலிய ரதிபன் அதிதரு

வரத னணி தமிழ் விரகன் மிகுபுகழ்

மருவு சுருதிநன் மலையி னமர்தரு

விரத முடையைநின் னிடையி னவள்மனம்

விரைசெய் குழலியை யணைவ தரிதென

இரதம் அழிதர வருதல் முனமினி

யெளிய தொருவகை கருது மலையனே.

 23



உரைப்பாளாய் வெறிவிலக்கிய துறையாகச் செய்யப் பட்டது. “நரை முது பெண்டீர்” என்பதை முதலிற் கொள்க. வெறி - வெறியாடுதல். மறி அடு தொழில் - யாட்டைப் பலியிடும் தொழில். குரவை - தெய்வத்திற்குக் குரவையாடுதல். இதனைச் சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவை முதலியவற்றான் அறிக. வெறி முதலிய “இவைகளை இன்று இனி (இப்பொழுதே) ஒழிமின்” - எனக் கூட்டுக. நசை - விருப்பம். அரவிந்தம் தாமரை. அஃது அதன் மலரால் ஆகிய மாலையைக் குறித்தது. இரண்டன் உருபு அணிதல் தொழிலினும் வரும் ஆதலால், “குழலியை அணிமின்” என்றாள். சரதம் - உண்மை ‘இவள் உறுவது ஓர் நசை உண்டு; அது தமிழ் விரகன் புயம் உறும் அரவிந்தம் (அதனைக்) குழலியை அணிமின்’ என முடிக்க.

1347.குறிப்புரை: இப்பாட்டு அகப் பொருட் களவியலில் தலைவனைத் தோழி வரைவு கடாதற்கண் பிறர் வரைவு உணர்த்திய துறையாகச் செய்யப்பட்டது. “மலையனே” என்பதை முதலிற் கொள்க. மலையன் - வெற்பன்; குறிஞ்சி நிலத் தலைவன் மண மலி பரிசம் வருவன. சரதம் - தலைவியை வரைந்து கொள்ளுதற்கு உரிய மிகுந்த பரிசப் பொருள்கள் வருவன ஆயினமை உண்மை. (அதனால்) தமிழ் விரகன் மலையின் அமர்தரு விரதம் உடையை நின் இடையின் அவள் மனம் - ஞான சம்பந்தனது மலையின் கண் விருப்பம் வைத்தலையே விரதமாக உடைய நின்னைப் பற்றி அவளது (தலைவியது) மனத்தில் எழுந்துள்ள எண்ணம். விரை செய் குழலியை அணைவது அரிது என - ‘இனித் தலைவன் தன்னைச் சேர்தல் இயலாது’ என்பதாய் இருத்தலால். அழிதர இரதம் வருதல் முனம் எளியது ஒருவகை. இனி கருது - அவள் இறந்து படும்படி அயலாரது தேர் இங்கு வந்து சேர்தற்கு முன்பு எளிதில் அதை மாற்றுதற்கு ஒரு வழியை நீ இப்பொழுதே எண்ணி முடிப்பாயாக.

அதி தரு வரதன் - மிகுதியாகத் தரும் வரத்தை உடையவன். சுருதி - தமிழ் மறை. அமர் - அமர்தல்; விரும்புதல்; முதனிலைத் தொழிற் பெயர். “விரை செய் குழலி” என்பது தோழி கூற்றாய்