உ
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசக சுவாமிகள்
அருளிச் செய்த
திருக்கோவையார்
என வழங்கும்
திருச்சிற்றம்பலக்கோவையார்
எட்டாம் திருமுறை
விநாயக வணக்கம்
எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளுங் கற்பகமே
- நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு.
1
-பிற்காலச்
சான்றோர் ஒருவர்
நூற்சிறப்பு
ஆரணங் காணென்பர் அந்தணர்
யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர்
காமநன் னூலதென்பர்
ஏரணங் காணென்பர் எண்ணர்
எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக்
கோவையைச் செப்பிடினே.
2
-பிற்காலச் சான்றோர்
ஒருவர்
|